ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

ரயில் சிநேகம்

Go down

ரயில் சிநேகம் Empty ரயில் சிநேகம்

Post  santhoshkumar Fri Dec 03, 2010 9:28 pm

ரயில் சிநேகம்!!!

'பயணிகள் கவனத்திற்கு... லால்குடி அரியலூர் மார்க்கமாக விழுப்புரம் வரை செல்லும் திருச்சி விழுப்புரம் பாஸஞ்சர் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது பிளாட்பாரத்திலிருந்து புறப்பட இருக்கிறது'

மைக்கில் அழகிய தேன் தடவிய குரலில் அறிவிப்பாளர் குரல் ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில் பிளாட்பாரத்தை அடைந்தான் ரஞ்சன்.

யாரேனும் தன்னை நோட்டம் விடுகிறார்களா எனக் கவனித்துக்கொண்டே தான் எதிர்பார்த்த ஆள் அவனுடைய புடை சூழ வண்டியில் ஏறுகிறானா என்பதையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த கோஷ்டியும் வண்டியில் ஏறியது. அவனும் ஏறினான்.

வண்டி கிளம்பியது. ரஞ்சன் மற்றும் அவன் தோழர்களின் பயணம் எப்போதும் இருட்டில்தான். ஆனால் இம்முறை முக்கிய பழிவாங்கும் அலுவல் காரணமாக பகலில் பிரயாணம் செய்ய நேரிட்டுவிட்டது. சுற்றும் முற்றும் நோட்டமிட்டு விட்டுக் கண்களை மூடி சற்றே தன்னை ரிலாக்ஸ் செய்து கொண்டான். பாஸஞ்சர் ஆடி அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் ரஞ்சன் மனக்குதிரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் பின்னோக்கி பயணித்தது.

ரஞ்சன், முரளியப்பன், குரு, பக்கிரி, இன்னும் சில நண்பர்கள் ஒன்று சேரக் காரணமாயிருந்தது ஒவ்வொருவருக்கும் ஒரு சம்பவம். ரஞ்சனின் சின்னம்மா ஒரு கிராமத் தலைவனால் கற்பழித்து கொல்லப்பட்டது, ஒருவனுக்கு அவன் தந்தை ஓட ஓட ஊரை விட்டு விரட்டப்பட்டது, மற்றொருவனுக்கு அவன் மனைவிக்கு ஊர் மக்களால் ஏற்பட்ட அவமானம் என்று ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தில் அந்தஸ்தில் உள்ள சிலரால் பெற்ற கசப்பான அனுபவங்கள். அதுவே இவர்கள் ஒன்று சேரக் காரணமாயிருந்தது.

இம்முறை ரஞ்சன் தன் சின்னம்மாவை துவம்சம் பண்ணியவனைத் தீர்க்கவேண்டும், அப்படியே தனது கதையையும் முடித்துக் கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். அவனைத் தீர்த்துக்கட்ட பல சந்தர்ப்பம் அமைந்தும் அவன் அடிவருடிகள் பலர் அவனுடன் காவலுக்கு இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. துணிந்து இறங்கத் தயாராக இருந்தும் தனக்கு எதாவது ஒன்று அவனது பாதுகாவலர்களால் ஏற்பட்டு விட்டால் பழிவாங்க முடியாமல் போய் விடுமே என்ற ஒரே காரணத்தால் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான். அதனால்தான் வண்டியில் பயணிப்பவர்களுக்கு எது நேர்ந்தாலும் பரவாயில்லை, தான் நினைத்ததைச் சாதித்தே தீரவேண்டும் என்ற வெறியில் இருந்தான்.

டடக் டடக் .. டடக் ... டடக் ..... என்று வண்டி ஒரே சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் வண்டி திருச்சி டவுனை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் வண்டி நின்றவுடன் அடுத்த கோச் வரை சென்று பழிதீர்க்கப்பட வேண்டியவனைப் பார்த்து நோட்டம் விட்டு வந்தான்.

சிக்னல் போட்டாகிவிட்டது. டிங் டிங் டிங் என்று மூன்று மணியோசை கேட்டது. வண்டி டவுனை விட்டு நகர்ந்தது.

‘வாழப்பழம் பச்ச வாழப்பழம்’ எனக் கூவியபடி சிக்கென்ற உடம்புடன் ஆனால் பார்க்க சுமாராக ஒரு பெண் வாழைப்பழம் விற்ற படி வந்தாள்.

"ஏம்மா இரண்டு வாழைப்பழம் கொடு" என்றான் ரஞ்சன்.

"ஏனுங்க டசனே ஐந்து ரூபாய்தான் வாங்கிக்கிங்க" என்றாள்.

சரி என்று வாங்கினான். ஆனால் அவனால் இரண்டு பழங்களுக்கு மேல் சாப்பிடமுடியவில்லை.

அதற்குள் வண்டி லால்குடியைத் தொட்டிருந்தது. வண்டி லால்குடி ஸ்டேஷனை தொட்டதுதான் தெரியும். ஐந்தாறு பேர் ஒரு கும்பலாக ஏறி ரஞ்சன் இருந்த சீட்டுக்குப் பக்கத்திலேயே வந்தமர்ந்தார்கள். வந்தவர்களில் ஒருவன் நீட்டாகத் துண்டை விரித்து வண்டி லால்குடியை விட்டு கிளம்புவதற்குள் குறட்டை விட ஆரம்பித்து விட்டான். எதிரே இருந்த கோஷ்டி சீட்டு விளையாட ஆரம்பித்து விட்டது.

அதில் ஒருவன் பழக்காரம்மாவைத் தேட, ரஞ்சன் தன்னிடம் மீதமிருந்த பழங்களை அவர்களிடம் நீட்ட அவர்களும் அதை வாங்கி சாப்பிட்ட படியே சீட்டாடத் துவங்கினர். பின்பு சற்று நேரப் பயணத்திலேயே அவர்கள் அவனுடன் கலகலவென்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். ரஞ்சனுக்கு எதிரே ஒருவன் அந்த கோஷ்டியுடன் வந்தவன் அமைதியாக திருவாசகம் படிக்க ஆரம்பித்து விட்டான்.

சில இருக்கைகள் தள்ளி ஒரு பெண்மணி "எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவார்" என்று கீச்சுக் குரலில் பாடிக்கொண்டிருந்தார். அதற்கேற்றபடி தாளம் போட ஒரு கூட்டம் என்று உற்சாகமாக பயணத்தை அனுபவித்தபடி பயணம் செய்து கொண்டிருந்தனர். சீட்டு விளையாடிக்கொண்டிருந்த கும்பலில் ஒருவன், “சார் பாடுறாங்களே அந்த அம்மா கோர்ட்ல வேலை செய்றாங்க” என்று ரஞ்சன் எதுவும் கேட்காமலே அவனிடம் சொன்னான்.

பாடல் முடிவடையும் தருவாயில் ஒருவன் வந்து 'மேடம் இந்தப் பாட்டை பாடுங்க' என்று நேயர் விருப்பம் போல் சொல்லிவிட்டு செல்ல, அடுத்த பாடலைப் பாட ஆரம்பித்தார்.

மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து. . . . . . . . . . . . . . . . . . . .

அதற்குள் சீட்டு விளையாட்டு களைகட்டி ஜோராகப் போய்க் கொண்டிருந்தது

வண்டி டால்மியாபுரம் வந்திருந்தது.

லால்குடியில் திருவாசகம் படிக்க ஆரம்பித்தவன் தற்போது அமர்ந்த நிலையிலே தூங்க ஆரம்பித்தான்.

ரஞ்சன் தன் கம்பார்ட்மெண்டிலேயே ஒரு ரவுண்டு அடித்து வர கிளம்பினான். டீச்சர்,டீச்சர் என்று கூப்பிட்டு ஒரு இளவயது அழகிய பெண்ணுடன் நாலைந்து பேர் அன்றைய சமையலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் கொஞ்ச தூரம் நடந்தான். அங்கு சிலர் சாமான்களுக்கு மாத்திரம் என்று எழுதப்பட்டிருந்த இடத்திலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஒருவன் வண்டியின் கதவுக்கும் வாஷ் பேசினுக்கும் நடுவில் நின்று கொண்டு இவ்விடம் சிகரெட் பிடிக்கக் கூடாது என்ற அறிவிப்புக் கீழே சுவாரசியமாக தம் அடித்துக் கொண்டிருந்தான். இங்குமங்கும் பலர் எவ்வித இலக்கும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு பெண் வடை மற்றும் போண்டாவை சத்தம் போடாமல் விற்றுக் கொண்டிருந்தாள்.

வண்டி கல்லகம் வந்தடைந்தது.

மீண்டும் தன் பழைய இடத்திற்கு ரஞ்சன் வந்தமர்ந்தான். அவனுக்கு இந்த வண்டியில் வந்தது ஒரு புது அனுபவத்தை கொடுத்தது. பல வருடங்களாகவே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததாலும், மக்களோடு ஒட்டி உறவாடி வாழாததாலும் அப்படி இருந்திருக்கலாம். ஏதேதோ நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு மார்பில் ஒரு விதமான வலி வந்து நெஞ்சு அடைப்பது போல் உணரத் தொடங்கினான். முதலில் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தாலும் நேரம் ஆக ஆக அவனால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மெல்ல அருகில் இருந்த ஒருவனிடம் அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் போது துண்டு விரித்து தூங்கிக் கொண்டிருந்தவன் எழுந்து 'என்னாச்சு சார' என்று பதட்டப்பட, அது மேலும் ரஞ்சனை பதட்டமாக்கியது. கண்கள் இருட்டுவது போல் உணர்ந்தான். அதற்குள் மற்றொருவர் அங்குமிங்கும் அலைந்து ஒரு மாத்திரையை யாரிடமோ வாங்கி வந்து இதை முதலில் நாக்குக்கு அடியில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ரஞ்சனிடம் கொடுக்க அவன் வைத்த சிறிது நேரத்திலேயே குணம் தெரிய ஆரம்பித்தது. முன் பின் தெரியாத தனக்குக் கஷ்டம் என்றவுடன் பதறிய கூட்டத்தைப் பார்த்தவுடன் நெகிழ்ந்து போனான். தான் ஒருவனைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இத்தனை பேர்கள் உயிரைத் துச்சமாக நினைத்தோமே என்று நினைத்து வருந்தினான்.

அதற்குள் வண்டி சில்லக்குடி வந்திருந்தது.

"சார் வண்டியை கொஞ்சம் நிறுத்தணும்" என்று ரஞ்சன் கூற, "அட ஏன் சார் விளையாடறீங்க, ஏற்கனவே எங்களுக்கு ஆபிஸுக்கு டயமாயிடுச்சு" என்றனர் சிலர்.

"இல்ல சார் டிராக்கில் வெடி குண்டு இருக்கு. அதனால் அவசியம் நிறுத்த வேண்டும்" என்று ரஞ்சன் கூற சிலர் சிரித்தனர்.

"இல்லங்க வெடி குண்டு வச்சதே எங்க சகாதான், நான் தான் அதற்கு காரணகர்த்தா" என்று சீரியஸாகச் சொல்ல அனைவரும் கலவரமானார்கள்

வண்டியை நிறுத்தி ரஞ்சன் சரணடைந்த போதும் சுற்றியிருந்தவர்கள் தன் மீது வீசிய பரிதாபப் பார்வையில் ரஞ்சன் புதிய பிறப்பெடுத்தான்
santhoshkumar
santhoshkumar

பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum