ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

சொர்க்கத்தில் மிஸ்டர். எக்ஸ்

Go down

சொர்க்கத்தில் மிஸ்டர். எக்ஸ் Empty சொர்க்கத்தில் மிஸ்டர். எக்ஸ்

Post  santhoshkumar Sun Dec 05, 2010 9:54 pm

மிஸ்டர் எக்ஸ். தான் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் சென்றார். அங்கே ஒரு தேவதை அவருக்குச் சொர்க்கத்தைச் சுற்றிக் காண்பித்து வழி நடத்தினாள்.

அவர்கள் அங்கே நடந்து சென்றபோது பாதையின் இருபக்கமும் ஏராளமான தேவதைகள் வேலைசெய்துகொண்டு இருந்தனர்.

முதல் பகுதியின் முகப்பில் அவரை நிறுத்தி வழிநடத்துபவள் சொன்னாள் - ”மனிதர்கள் கடவுளுக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் / மனுக்கள் அனைத்தும் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவர்கள் அனைவரும் மனிதர்களிடம் இருந்து வந்த மனுக்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்”.

முதல் பகுதியில் வேலைசெய்யும் தேவதைகள் அனைவரும் மிகமிக தீவிரமாக சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டு இருந்தனர்.

கட்டுக்கட்டாக மனுத்தாள்கள் இருந்தன. அதைக் கண்ட மிஸ்டர் எக்ஸ். ”கடவுளிடம் மனுக் கொடுப்பதில் மக்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்களா?”.

முகப்பைக் கடந்து மேலும் சிறிது தூரம் நடந்து சென்றனர். முதலாவது பகுதி முடிந்து இரண்டாவது பகுதி ஆரம்பித்தது. அங்கேயும் ஏராளமான தேவதைகள் முதல்பகுதியில் கண்டதைப் போன்றே அதிவேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலைபார்த்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களைச் சுட்டிக்காட்டிய வழிநடத்துபவள் சொன்னாள் - “இதுதான் முதல்பகுதியில் மனிதர்களிடம் இருந்து வாங்கிய விண்ணப்பங்களை கடவுளிடம் சேர்ப்பதற்கான பகுதி. இவர்கள் அதற்குரிய பணியைச் செய்துகொண்டிருக்கின்றனர்”. இரண்டாவது பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் ஆர்வமாகவும், அவற்றை முறைப்படி அடுக்கிக்கொண்டும் இருந்தனர்.

இப்படி சொர்க்கத்தைச் சுற்றிப்பார்த்த மிஸ்டர் எக்ஸ். அதன் இறுதிப்பகுதியை அடைந்தார். அது ஒரு சிறிய பகுதியாக இருந்தது. அங்கே வெளிவாயிலில் ஒரே ஒரு தேவதை மட்டும் அமர்ந்திருந்தாள். அவளும் எந்த வேலையும் செய்யவில்லை.

அவளைக்கண்ட மிஸ்டர். எக்ஸுக்கு ஆச்சரியம். ”இதற்கு முந்தையப் பகுதிகளில் வேலை செய்த அனைவரும் மிக மிகத் துரிதமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தனர். ஆனால் இறுதி வெளிவாயிலில் இருக்கும் இவளோ ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறாளே?. இது என்ன இடம்? இவள் என்ன செய்கிறாள்?” என்று வழிநடத்துபவளிடம் கேட்டார்.

வழிநடத்தும் தேவதை சொன்னாள் - “இதுதான் மனிதர்களின் விண்ணப்பங்களைப் படித்துப் பார்த்த பிறகு கடவுள் திரும்ப அனுப்பும் அக்னாலட்ஜ்மெண்ட் பகுதி”.

”எத்தனை கோடி விண்ணப்பங்களை கடவுள் முன் வைத்தாலும், அவராக மனது வைத்துக் குறிப்பிட்ட சில விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார். அப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றுக்கு மட்டும், அவர் பதிலிடுகிறார். அதனாலேயே இங்கே ஒருத்தி மட்டுமே வேலை செய்கிறாள். ஆனால் அவளுக்கு எப்போதாவதுதான் வேலை.”

நீதி : எல்லாப் பாரத்தையும் கடவுள் மேல் போட்டுவிட்டு ஓய்ந்திருந்தால் எந்த வேலையும் நடக்காது. ஏதாவது சில விசயங்களுக்கு மட்டும்தான் கடவுள் நமக்கு உதவுவார். நமது அனைத்துச் செயல்களுக்கும் நாமே காரணகர்த்தா. கடவுளைக் காரணம் காட்டி நமது பணியைத் தள்ளிப் போடக்கூடாது.
santhoshkumar
santhoshkumar

பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum