ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

செய்யும் தொழிலே தெய்வம்

Go down

செய்யும் தொழிலே தெய்வம் Empty செய்யும் தொழிலே தெய்வம்

Post  santhoshkumar Fri Dec 03, 2010 9:30 pm

செய்யும் தொழிலே தெய்வம்!!!

அந்த கிராமமே விழாக்கோலம் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அந்த கிராமத்துக்காரராக இருந்த ஒருவர் இன்று மந்திரி ஆகி அதே கிராமத்திற்கு விஜயம் செய்கிறார். பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதியுதவி வாரி வழங்க உள்ளார். சுற்றுச் சூழலை பாதுகாப்பது எப்படி என்று சிறப்புச் சொற்பொழிவு ஆற்றப் போகிறார். எங்கும் மைக் செட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. கட்சிக் கொடிகள் பறக்கின்றன. சுவரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மரக்கிளைகளில் மின் விளக்குகள் தோரணமாக தொங்க விடப்பட்டு ஜொலிக்கின்றன.

துப்புரவுத் தொழிலாளி பூபாலனுக்கு கடந்த நான்கு நாட்களாக சரியான வேலை. குனிந்து நிமிர்ந்து வீட்டைக் கூட்டி சுத்தம் செய்வதே நமக்கெல்லாம் கஷ்டமாக இருக்கும்போது, ரோட்டையும், ஊரையும் கூட்டி சுத்தப்படுத்துவதென்றால் கேட்கவா வேண்டும். பூபாலனுக்கு தனது சிறுவயது முதல், இன்றைய அமைச்சர் ஐயாவுடன், நல்ல பழக்கமும் அறிமுகமும் உண்டு. இன்று மாண்புமிகு மந்திரியாகியுள்ள அவரின் வருகை அவனுக்கே மனதில் ஒரு வித மகிழ்ச்சியையும், செயலில் ஒரு வித எழுச்சியையும் உண்டாக்கி இருந்தது. "செய்யும் தொழிலே தெய்வம் - அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்" என்று அறிந்திருந்த பூபாலன் கிராமத்தின் நுழைவாயிலிலிருந்து ஆரம்பித்து, விழா நடக்கும் மேடை வரை, மண் சாலையை வழி நெடுக குப்பை ஏதும் இல்லாமல் சுத்தமாகக்கூட்டி, வெகு அழகாக வைத்திருந்தான்.

'மந்திரி வருகிறார், வந்து கொண்டே இருக்கிறார், இன்னும் சற்று நேரத்தில் நம் கிராமத்திற்கு வந்து விடுவார்' என ஒலி பெருக்கியில் கூறிக்கொண்டே இருந்தனர். வழியெங்கும் இருபுறமும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் ஜீப்புகள் புடை சூழ முன்னும் பின்னும் பலவித கார்கள் பவனி வர அமைச்சர் விழா மேடையை நெருங்கி விட, வேட்டுச்சத்தங்கள் முழங்கிட, பத்தாயிரம் வாலா பட்டாசுகள் பல கொளுத்தப்பட்டு மக்கள் வெள்ளம் கூட்டம் கூட்டமாக முண்டி அடித்து வந்து சேர, விழா மேடையே மிகவும் சுறுசுறுப்படைந்திருந்தது. கட்சியில் முக்கியப் பிரமுகர்களும், தொண்டர்களும், கிராமத்துப் பெரியவர்களும் மேடை ஏறி மாலைகள் அணிவித்து, பொன்னாடைகள் போர்த்தி, அமைச்சருக்கு மரியாதை செய்தனர். அமைச்சர் பேசும் போது, சுற்றுப்புற சூழ்நிலைகளைப் பேணிப் பாதுகாப்பது எப்படி என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தனது வருகைக்காக கிராமத்தின் பிரதான சாலை அழகு படுத்தப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்து அதற்காக உழைத்த துப்புரவுப் பணியாளர்களை மேடைக்கு வருமாறு அழைத்து பரிசுகள் கொடுத்து கெளரவித்தார்.

நீண்ட நாட்களுக்குப்பின், பூபாலனைk கண்ட அமைச்சர், அவனிடன் அன்புடன் நலம் விசாரித்து விட்டு, அவனுக்குத் தன் கையால் ஒரு பொன்னாடையைப் போர்த்தி, தங்க மோதிரம் ஒன்று பரிசளித்து, அவனைக் கட்டிப்பிடித்தவாறு, புகைப்படக்காரருக்கு போஸ் கொடுத்தார். தனது கடின உழைப்புக்கு கிடைத்த பாராட்டினாலும், அமைச்சர் அவர்கள் தன்னை மறக்காமல் நினைவு வைத்திருப்பதையும் உணர்ந்த பூபாலன் மனம் நெகிழ்ந்து போனான். அமைச்சர் தனது உரையில், "பூபாலன் போன்ற பொது நல நோக்குள்ள கடின உழைப்பாளியைக் காண்பது அரிது. துப்புரவுத் தொழிலாளிகள், சமுதாயத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள். அவர்கள் பணி என்றுமே அத்யாவசியமானது. அவர்கள் மட்டும் இல்லாவிட்டாலோ, வேலை நிறுத்தம் செய்தாலோ, நம் தெருவே, ஊரே, நாடே, உலகமே நாறி விடும். அவர்கள் சேவை எப்போதுமே நமக்கு அத்யாவசியத் தேவை என்றும் பொது மக்கள் உணர்ந்து, அவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு அன்பும் ஆதரவும் அளித்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

விழா இனிதே நிறைவடைந்து அமைச்சர் புறப்பட கூட்டம் கலைந்து சென்றது. துப்புறவுத் தொழிலாளி பூபாலனை ஒரு சிலர் பாராட்டினர். அவனுக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டத்தை எண்ணி சிலர் வியந்தனர். ஒரு சிலர் பொறாமை கூடப்பட்டனர். மறுநாள் செய்தித் தாள்களில் அமைச்சருடன் பூபாலன் படங்களும் பாராட்டுக்களும் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தன. எழுதப் படிக்கத் தெரியாத பூபாலன், வழக்கம் போல் தன் கடமையே கண்ணாக, விழா நடந்த மேடையைச் சுற்றிலும், தெருக்களிலும், மாலைகளிருந்து விழுந்து கிடந்த உதிரிப் பூக்களையும், பட்டாசுக் குப்பைகளையும் பாடுபட்டு தேடித் தேடி கூட்டிக் குவித்துக் கொண்டிருந்தான்.
santhoshkumar
santhoshkumar

பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum