ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

சித்தர்களை காண்பது எப்படி

Go down

சித்தர்களை காண்பது எப்படி  Empty சித்தர்களை காண்பது எப்படி

Post  sathishkumar Tue Nov 30, 2010 7:39 pm

உண்மையிலேயே சித்தர்கள் சித்தர்கள் என்கிறார்களே இவர்கள் யார்?

இவர்கள் உண்டென்றால் இவர்களைக் நாம் காண்பது எப்படி?

நமது தமிழில் ஒரு விசேஷம் என்னவென்றால் அது சொல்லிலேயே பொருளைக் கொண்டிருப்பதுதான்.

பாருங்கள் சித்தர், புத்தர், ஞானி இந்த சொல்லிலேயே அவர்களைப் பற்றிய விபரம் உள்ளது.

ஆம், சித்தம் தெளிந்தவன் சித்தன்.

புத்தி தெளிந்தவன் புத்தன்.

ஞானம் அறிந்தவன் ஞானி

பாருங்கள் வார்த்தையிலேயே விஷயங்கள் இதுதான் தேன்தமிழின் அற்புதம்.

சித்தம் தெளிந்ததனால் அவர்கள் சித்தரானார்கள், நாம்
பித்தம் நிறைந்தனால் பித்தர்கள் ஆனோம்.

சித்தம் தெளிந்த அவர்கள் நிலையாமையை உணர்ந்தார்கள்.
அதனால் அவர்களுக்கு உலகின் இயக்கநிலையின் உண்மை புரிந்தது.

இந்த உலகின் ( பிரபஞ்சத்தின் - பூமியின் ) அருமையான ஆற்றல் என்ன தெரியுமா?

நீங்கள் ஒன்று தந்தால் அதனை நூறாக திரும்பத்தரும்,

ஒரு மாங்கொட்டை நட்டால் எத்தனை மாம்பழங்கள்,

ஒரு நெல் வைத்தால் எத்தனை நெல்மணிகள்?

இந்த மாபெரும் உண்மையை கண்டறிந்தார்கள் சித்தர்கள்!

இதைப்போலவேதான் புண்ணியங்களும், இதே நிலைதான் பாபங்களுக்கும்.

ஒன்று என்பது ஒன்றுடன் நிற்பதில்லை ஒன்று அதன் தன்மைக்கேற்ப இரண்டாகலாம், நூறாகலாம் ஏன் ஆயிரம் கூட ஆகலாம் என நன்கறிந்தனர் சித்தர்கள்.

ஆகவேதான் அவர்கள் உலக வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் தீர்வு தந்தார்கள்.

ஏனென்றால் எதிர்வரும் காலங்களில் மனிதன் மன மமதை
கொண்டவனாக,

தான் தெரியாததையும் தெரிந்தவனாக ஊருக்கு காட்டிக் கொள்பவனாக,

தான் கண்டதை செல்வம் பண்ணும் வழியில் தேர்ந்தவனாக,

உண்மையை மறைத்து
தனக்கொரு நீதியும்,

மற்றவர்களுக்கு ஒரு நீதியுமாக உலாவருபவனாக

வருவான் என்பதை அறிந்த அந்த சித்புருஷர்கள் தாங்கள் கண்டதையும்,
கொண்டதையும்,
செய்ததையும்,
செய்வதையுமே
மறைபொருளாக வைத்துள்ளார்கள்.

மேலும் அவர்களின் பார்வையில் இருந்து எதுமே தப்பாது.

ஆயிரக்கணக்கான சித்புருஷர்கள் வாழ்ந்த, வாழும் உலகில் எங்கும் அவர்கள் நிறைந்துள்ளார்கள்.

சித்புருஷர்களின் ஒரு விசேஷ அருங்குணம் என்னவென்றால் நாம் அவர்களின் வழியை பின்பற்றினால் மிக மகிழ்ச்சியுடன் நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் அள்ளித்தருவார்கள் பின் தொடர்வார்கள், நம்மை பாதுகாப்பார்கள்.

ஆனால் நமது நிலையின் சிறு மாற்றம் கூட அவர்களை கோபப்பட வைத்துவிடும், ஒரு முறை நம்மீது கோபம் வந்தால் அதன்பின் என்ன செய்தாலும் அவர்களின் அன்பைப் பெறவே முடியாது.

அதோடு நம் வாழ்வும் அதோகதியாகிவிடும்.

காரணம், அவர்கள் (சித்தர்கள்) உலகில் விதியின் கைகளில் மாட்டித் தவிக்கும் மனிதர்களை எதன் மூலமாகவாவது கரைசேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தினால் தன்னைக்கரைத்துக் கொண்டவர்கள்.

அதனால்தான் இன்னும் இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நம்பிச் சேர்பவர்களை கரை சேர்க்கிறார்கள்.
அவர்களையே ஏமாற்றுபவர்களை (ஏமாற்றுவதாக எண்ணி ஏமாறுபவர்கள்) அவர்கள் அழிக்கிறார்கள்,

ஆமாம் சித்தர்கள் அழிக்கிறார்கள். அழித்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை நம்பினவர்களை எந்த சூழலிலும் கை விடுவதில்லை, கை விட்டதும் இல்லை.
கைவிடப்போவதும் இல்லை.

காரணம் அவர்கள் நமக்காக தன்னைக் கரைத்துக்கொண்டவர்கள்.

மருத்துவம், மாந்தரீகம், ஜோதிஷம், வாழ்வியல் அத்தனையிலும் அவர்களின் பங்கு மகத்தானது.

அவர்களைக் காணவும், அவர்களுடன் சேரவும், அவர்களின் அன்பில் திளைக்கவும், அதியற்புதமான நிலைகளை அடையவும் மிக எளிமையான அவர்களின் மூல மந்த்ரம் ஒன்று உண்டு.

இதனை நல்ல தூய்மையான உள்ளத்துடன்,

மற்றவர்களுக்கு (எந்தவிதமான பலனும் எதிர்பாராமல்)

உதவும் மனதுடன் இரவில் அவர்களை நினைத்து நூற்றிஎட்டு முறை மனமுருக தினசரி சொல்லுங்கள் அவர்களின் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும்,

ஆனால் உங்களுடைய இந்த சாதனை முழுக்க முழுக்க பிறர் நன்மைக்காக மட்டுமே தான் பயன்படவேண்டும்.

( அதாவது அவர்கள் உங்கள் மூலமாக உலகமக்களுக்கு நன்மைகள் செய்ய முயல்வார்கள்)

சித்புருஷர்கள் நமது உள் மனம் புரிந்தவர்கள்,

நிஜத்தில் ஒன்றும், செயலில் ஒன்றுமாக இறங்கி விடவேண்டாம். உன்மத்த நிலைக்கு (பைத்தியநிலை) ஆளாக்கி விடுவார்கள்.

மேலும் பரிசோதிக்க எண்ணி இறங்கவேண்டாம்.

உண்மையில் உலக நன்மைக்காக செயல்பட நினைப்பவர்கள் செய்யலாம். சாதிக்கலாம், பெரும் புகழ் பெறலாம்,
உங்களுக்கு தெரியாத விஷயமே இருக்காது. சித்புருஷர்களுக்கு தெரிந்ததெல்லாம் உங்களுக்கும் தெரியும்.[/b]

அந்த மகா மந்த்ரம்

"ஓம் கிங் ரங் அங் சிங்"

இந்த மந்த்ரத்தை ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல் சொல்லி வந்தால் அந்த மகாசித்புருஷர்களை நீங்களும் சந்திப்பீர்கள், சாதிப்பீர்கள், வாழ்க வாழ்க. பல்லாண்டு.

ஓம் சித்தேஸ்வராய நமஹ.,
sathishkumar
sathishkumar

பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum