Similar topics
Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
“சிவாய” என்ற மந்திரத்தின் உள்ளே நான் என்கிற இந்த உயிர் அடங்கி நிற்பது எப்பொழுது?
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: இந்து தர்மம் :: சித்தர்
Page 1 of 1
“சிவாய” என்ற மந்திரத்தின் உள்ளே நான் என்கிற இந்த உயிர் அடங்கி நிற்பது எப்பொழுது?
பேராசிரியர் டி.என். கணபதி
புலம்பல் 115:
வவ்வெழுத்தும் அவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
யவ் வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்?
பொழிப்புரை: “சிவாய” என்ற மந்திரத்தின் உள்ளே நான் என்கிற இந்த உயிர் அடங்கி நிற்பது எப்பொழுது?
விளக்கவுரை: சிவ்வெழுத்து என்பது “சி”; வவ்வெழுத்து என்பது “வா”. யவ்வெழுத்து என்பது “ய”ஆகும். அதாவது “சிவாய” என்கிற மந்திரம். இந்த மந்திரம், அவ்வெழுத்தாகிய மந்திரம், பிறப்பை அறுக்கிற ஒரு வாளாகும். இந்த மந்திரம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய மந்திரம்.
ஏறத்தாழ எல்லாத் தமிழ்ச் சித்தர்களும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஓம் என்கிற மந்திரம் சித்தர் இலக்கியத்தில் பேசா எழுத்து என்று வழங்கப்படுகிறது. திருமூலர் சொல்கிறார்: “ஓம் என்பது ஓரெழுத்து; அது சிவசொரூபம்.” சிவவாக்கியர் அதைச் சுரியதோர் எழுத்து என்கிறார். அதாவது மாபெரும் மந்திரத்தைத் தனக்குள் குறுக்கி வைத்திருக்கிற மந்திரம் என்ற பொருளில் அவர் அவ்வாறு பயன்படுத்துகிறார். ஓம் என்பது அதிசூக்கும பஞ்சாட்சரம் என்று சொல்லப்படுகிறது. அது தனக்குள் ஐந்தெழுத்தை அடக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐந்தெழுத்துகளாவன; அகாரம், உகாரம், மகாரம், நாதம், பிந்து. இந்தச் செய்தியைச் சிவவாக்கியர் தன் பாடல் ஒன்றில் தெரிவிக்கிறார். மேலும் அவர் சிவாயமே இந்த மந்திரமாக வந்து அமர்ந்தது என்றும் தெரிவிக்கிறார். “அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே” (செ.88). இந்த மந்திரத்தை அறிந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை என்றும் அவர் அறிவிக்கிறார்.
ஐந்தெழுத்து மந்திரம் பிறப்பறுக்க உதவும் என்று திருமூலரும் ஆமோதிக்கிறார். அவரைப் பொறுத்தமட்டில் இந்த அகில உலகமும் ஐந்தெழுத்தால் ஆனதுதான்; அதை உணர்த்தவே “அம்பலமாவது அஞ்செழுத்தாமே” (திருமந்திரம், மந்.2775) என்று பாடுகிறார். சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் முதலெழுத்தான ‘சி’ என்பதற்கு, காண்பனவெல்லாம் சிவமாகக் காணவேண்டும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இந்த ‘சி’ யைத் திருமூலர் நாயோட்டு மந்திரம் என்று பெயரிட்டு அழைக்கிறார். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தைச் செபிக்கிறவன் முதுமை நீங்கி இளைஞனாகிறான். இந்த மந்திரத்தைச் செபிப்பது தாமிரத்தைப் பொன்னாக்கும்; அதாவது, உடம்பு சாவாவரம் பெறும்.
திருமூலர் ஐம்பத்தோர் அட்சரங்களைப் பற்றிப் பேசுகிறார். ஒருவன் குண்டலினி யோகத்தை மேற்கொள்ளும் போது அதனுடைய பல்வேறு நிலைகளில் அவன் கேட்டு அனுபவிக்கிற ஒலிகள் அவை. இந்த ஐம்பத்தோர் அட்சரங்களும் ஐந்து அட்சரங்களுக்குள் அடங்கும் என்கிறார் அவர். சில சித்தர்கள் எட்டெழுத்து மந்திரம் என்றும் ஐந்தெழுத்து மந்திரம் என்றும் இருமாதிரியாக இதனைக் குறிப்பிடுகிறார்கள். எட்டெழுத்து மந்திரமாவது; அ. உ. ம. ந. ம. சி. வா. ய. ஐந்தெழுத்து மந்திரமாவது சி. வா. ய. ந. ம. இந்த மந்திரம் ஒரு மகாவாக்கியம் ஆகும். இதில் “சிவ” என்பது “அது” என்றும். “நம” என்பது நீயே” என்றும். “அய” என்பது “ஆகிறாய்” என்றும் பொருள் தரும். எனவே சிவாயநம என்பது “அது நீயே ஆகிறாய்” அதாவது “தத் த்வம் அசி” என்று பொருள்படுகிறது. சில சித்தர் பாடல்களில் இந்த ஐந்தெழுத்து மந்திரம் சிவயவசி என்று குறிப்பிடப்படுகிறது. இதை எப்படி வாசித்தாலும் சிவயவசி என்றே பொருள் தரும் (...விகடகவி என்பதைப் போல) ஆகையால் சிவவாக்கியர் இதனை இருதலைத்தீ என்கிறார். இந்த இருதலைத்தீ, பிறப்பு. இறப்பு இரண்டையும் சுடும். மெய்யுணர்வு நிலையைத் திருமூலர் “நமச்சிவாயப்பழம் தின்று கிடக்கும் நிலை” என்று இந்த மந்திரத்தின் பெயராலேயே குறிக்கிறார் என்பது இந்த மந்திரத்தின் மெய்யுணர்த்தும் இயல்பைப் புலப்படுத்தும்.
புலம்பல் 115:
வவ்வெழுத்தும் அவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
யவ் வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்?
பொழிப்புரை: “சிவாய” என்ற மந்திரத்தின் உள்ளே நான் என்கிற இந்த உயிர் அடங்கி நிற்பது எப்பொழுது?
விளக்கவுரை: சிவ்வெழுத்து என்பது “சி”; வவ்வெழுத்து என்பது “வா”. யவ்வெழுத்து என்பது “ய”ஆகும். அதாவது “சிவாய” என்கிற மந்திரம். இந்த மந்திரம், அவ்வெழுத்தாகிய மந்திரம், பிறப்பை அறுக்கிற ஒரு வாளாகும். இந்த மந்திரம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய மந்திரம்.
ஏறத்தாழ எல்லாத் தமிழ்ச் சித்தர்களும் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஓம் என்கிற மந்திரம் சித்தர் இலக்கியத்தில் பேசா எழுத்து என்று வழங்கப்படுகிறது. திருமூலர் சொல்கிறார்: “ஓம் என்பது ஓரெழுத்து; அது சிவசொரூபம்.” சிவவாக்கியர் அதைச் சுரியதோர் எழுத்து என்கிறார். அதாவது மாபெரும் மந்திரத்தைத் தனக்குள் குறுக்கி வைத்திருக்கிற மந்திரம் என்ற பொருளில் அவர் அவ்வாறு பயன்படுத்துகிறார். ஓம் என்பது அதிசூக்கும பஞ்சாட்சரம் என்று சொல்லப்படுகிறது. அது தனக்குள் ஐந்தெழுத்தை அடக்கி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஐந்தெழுத்துகளாவன; அகாரம், உகாரம், மகாரம், நாதம், பிந்து. இந்தச் செய்தியைச் சிவவாக்கியர் தன் பாடல் ஒன்றில் தெரிவிக்கிறார். மேலும் அவர் சிவாயமே இந்த மந்திரமாக வந்து அமர்ந்தது என்றும் தெரிவிக்கிறார். “அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே” (செ.88). இந்த மந்திரத்தை அறிந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை என்றும் அவர் அறிவிக்கிறார்.
ஐந்தெழுத்து மந்திரம் பிறப்பறுக்க உதவும் என்று திருமூலரும் ஆமோதிக்கிறார். அவரைப் பொறுத்தமட்டில் இந்த அகில உலகமும் ஐந்தெழுத்தால் ஆனதுதான்; அதை உணர்த்தவே “அம்பலமாவது அஞ்செழுத்தாமே” (திருமந்திரம், மந்.2775) என்று பாடுகிறார். சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் முதலெழுத்தான ‘சி’ என்பதற்கு, காண்பனவெல்லாம் சிவமாகக் காணவேண்டும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இந்த ‘சி’ யைத் திருமூலர் நாயோட்டு மந்திரம் என்று பெயரிட்டு அழைக்கிறார். இந்த ஐந்தெழுத்து மந்திரத்தைச் செபிக்கிறவன் முதுமை நீங்கி இளைஞனாகிறான். இந்த மந்திரத்தைச் செபிப்பது தாமிரத்தைப் பொன்னாக்கும்; அதாவது, உடம்பு சாவாவரம் பெறும்.
திருமூலர் ஐம்பத்தோர் அட்சரங்களைப் பற்றிப் பேசுகிறார். ஒருவன் குண்டலினி யோகத்தை மேற்கொள்ளும் போது அதனுடைய பல்வேறு நிலைகளில் அவன் கேட்டு அனுபவிக்கிற ஒலிகள் அவை. இந்த ஐம்பத்தோர் அட்சரங்களும் ஐந்து அட்சரங்களுக்குள் அடங்கும் என்கிறார் அவர். சில சித்தர்கள் எட்டெழுத்து மந்திரம் என்றும் ஐந்தெழுத்து மந்திரம் என்றும் இருமாதிரியாக இதனைக் குறிப்பிடுகிறார்கள். எட்டெழுத்து மந்திரமாவது; அ. உ. ம. ந. ம. சி. வா. ய. ஐந்தெழுத்து மந்திரமாவது சி. வா. ய. ந. ம. இந்த மந்திரம் ஒரு மகாவாக்கியம் ஆகும். இதில் “சிவ” என்பது “அது” என்றும். “நம” என்பது நீயே” என்றும். “அய” என்பது “ஆகிறாய்” என்றும் பொருள் தரும். எனவே சிவாயநம என்பது “அது நீயே ஆகிறாய்” அதாவது “தத் த்வம் அசி” என்று பொருள்படுகிறது. சில சித்தர் பாடல்களில் இந்த ஐந்தெழுத்து மந்திரம் சிவயவசி என்று குறிப்பிடப்படுகிறது. இதை எப்படி வாசித்தாலும் சிவயவசி என்றே பொருள் தரும் (...விகடகவி என்பதைப் போல) ஆகையால் சிவவாக்கியர் இதனை இருதலைத்தீ என்கிறார். இந்த இருதலைத்தீ, பிறப்பு. இறப்பு இரண்டையும் சுடும். மெய்யுணர்வு நிலையைத் திருமூலர் “நமச்சிவாயப்பழம் தின்று கிடக்கும் நிலை” என்று இந்த மந்திரத்தின் பெயராலேயே குறிக்கிறார் என்பது இந்த மந்திரத்தின் மெய்யுணர்த்தும் இயல்பைப் புலப்படுத்தும்.
sathishkumar- பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: இந்து தர்மம் :: சித்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum