ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.

Go down

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Empty காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.

Post  sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

காந்தி இன்றும் தேவைப்படுகிறார். Gandhi-04

ராமச்சந்திர குஹா
தமிழில்: யதுநந்தன்
இந்திய
விடுதலைக்கும் பிரிவினைக்கும் பிறகு, இந்திய மக்களைப் பெருமளவில்
பிளவுபடுத்திய ஒரு விவகாரம் டிசம்பர் 1992இல் அயோத்தியிலிருந்த மசூதி
இடிக்கப்பட்ட சம்பவந்தான். ஒரு கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் மசூதி
(பாபர் மசூதி என அது அழைக்கப்பட்டது) கட்டப்பட்டதாகவும் அந்த இடத்தில்தான்
ராமர் பிறந்தார் என்றும் இந்துத் தீவிரவாதிகள் சொன்னார்கள். 80களின்
இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் ஏகப்பட்ட தொண்டர்கள் மசூதியைக் கைப்பற்ற
முயன்றார்கள். இந்த முயற்சிகள் வட இந்தியாவில் பல மதக்கலவரங்களுக்குக்
காரணமாக அமைந்தன.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்குச் சில நாள்களுக்கு
முன்னால் காந்தியவாதிகளின் குழு ஒன்று அயோத்திக்கு விஜயம் செய்தது.
காந்தியுடன் நெருங்கிப் பணிபுரிந்த மருத்துவரான சுசீலா நய்யார் என்னும் 80
வயதுப் பெண்மணியின் தலைமையில் அந்தக் குழு சென்றது. ஒரு பிரார்த்தனைக்
கூட்டமும் நடந்தது. காந்திக்கு மிகவும் பிடித்த "ரகுபதி ராகவ ராஜாராம்"
பாடலுடன் அந்தக் கூட்டம் முடிவடைவதாக இருந்தது. அந்தப் பாடலில் "ஈஸ்வர்
அல்லா தேரே நாம்" (ஈஸ்வரன், அல்லா இரண்டுமே கடவுளின் பெயர்கள்தான்) என்னும்
வரியைப் பாடிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து கூச்சலும் குழப்பமும்
எழுந்தன. கூட்டத்தின் ஒரு பகுதியினர் மேடையை நோக்கி வந்தார்கள். டாக்டர்
சுசீலா இறங்கிவந்து எதிர்ப்பாளர்களைச் சமாதானப்படுத்த முயன்றார். தாங்கள்
"காந்தியின் சார்பில்" (ஹம் காந்திஜி கி தரஃப் ஸே ஆயே ஹை) வந்திருப்பதாகச்
சொன்னார் சுசீலா. நாங்கள் "கோட்ஸேவின் சார்பில் வந்திருக்கிறோம்" (ஔர் ஹம்
கோட்ஸே கி தரஃப் ஸே) என எதிர்ப்பாளர்கள் சொன்னதாகச் சொல்லப்படுகிறது.
"நாங்கள் காந்தியைக் கொலைசெய்த நாதுராம் கோட்ஸேயின் சார்பில்
வந்திருக்கிறோம். காந்தியைப் போலவே நீங்களும் முஸ்லிம்களிடம் பக்கச்
சார்புடன் நடந்து கொள்கிறீர்கள் என்று நினைக்கிறோம்" என்றார்கள் அவர்கள்.

இந்தியாவில்
தற்போது காந்தியை இந்து வலதுசாரிகள் மட்டும் வெறுக்கவில்லை; இடதுசாரி
மாவோயிஸ்டுகளும் எதிர்க்கிறார்கள். தற்போது "தேசம் சந்திக்கும் மிகப்பெரிய
உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்" எனப் பிரதமரால் குறிப்பிடப்பட்ட அதே
மாவோயிஸ்டுகள். மாவோயிஸ்ட் இயக்கம் 1967இல் மேற்கு வங்கத்தின் வடபகுதியில்
உள்ள நக்ஸல் என்னும் கிராமத்தில் உதித்ததால் இந்திய மாவோயிஸ்டுகள்
நக்ஸலைட்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
காந்தியின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வருடம்
முழுக்க அதாவது, 1969இல் நாடு முழுக்க நகரங்களிலும் கிராமங்களிலும் இருந்த
மகாத்மா காந்தியின் சிலைகளை உடைத்துத் தள்ளினார்கள் நக்ஸலைட்டுகள்.
அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்குள்ளும் புகுந்து அவரது உருவப்படத்தை
உடைத்தெறிந்தார்கள்.

1970களில் மேற்கு வங்கக் காவல் துறை
மாவோயிஸ்டுகளைக் கடுமையாக ஒடுக்கியது. ஆனால், அவர்கள் மீண்டும் ஒன்று
திரண்டனர். இந்த முறை இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் மிகச்
சக்திவாய்ந்தவர்களாக உருவெடுத்தார்கள். மாவோயிஸ இயக்கம் இப்படிப் பலம்
பொருந்தியதாக உருவெடுத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் பள்ளி ஆசிரியரான
கொண்டபள்ளி சீத்தாராமைய்யா. இவர் உருவாக்கிய மக்கள் யுத்தக் குழு காவல்
நிலையங்களையும் ரயில் நிலையங்களையும் பலமுறை துணிகரமாகத் தாக்கியது. காவல்
துறை இறுதியில் "கேஎஸ்"ஐ (அவரை அப்படித்தான் அழைப்பார்கள்) கைதுசெய்தது.
பிறகு அவர் உடல்நலம் சரியில்லாதவர்போல நடித்ததால் மருத்துமனையில்
அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தப்பிச்சென்றார் சீத்தாராமைய்யா.

அதற்குப்
பிறகு மீண்டும் அவரைக் கைதுசெய்யக் காவல் துறைக்கு இரண்டு ஆண்டுகள்
பிடித்தன. தப்பி ஓடியபோது என்ன செய்தீர்கள் என ஒரு பத்திரிகையாளர் அவரிடம்
கேட்டார். ஹைதராபாதிலிருந்த மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்று
அங்கிருந்து 600 மைல் தொலைவிலிருந்த குஜராத்தில் காந்தியின் பிறந்த
இடத்திற்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார். குஜராத்தில் ரயிலிலிருந்து
இறங்கியவுடன் ஒரு ரிக்ஷாவைப் பிடித்துக் காந்தி பிறந்த வீட்டிற்குச்
சென்றாராம் கேஎஸ். தற்போது அந்த இடம் காந்தி நினைவு அருங்காட்சியகமாக
மாற்றப்பட்டிருக்கிறது. "நான் அங்கே சென்று மக்குவின் மீது காறித்
துப்பினேன்." என்று அந்த நிருபரிடம் சொன்னார் கேஎஸ். மக்கு என்பது
கோவில்களில் சன்னதிக்கு வெளியில் உள்ள அலங்கார ஓவியங்கள். இந்திய நாட்டின்
தந்தை என்று அறியப்படும் ஒரு மனிதர்மீது தனக்குள்ள கண்டனத்தையும்
வெறுப்பையும் வெளிப்படுத்த இப்படிச் செய்தார் அந்த மாவோயிஸ்ட்.

தீவிர
இடதுசாரிகளும் வலதுசாரிகளும் காந்தி மீது வெறுப்புடன் இருக்கிறார்கள்,
சரி. இந்த இரண்டு பாதைக்கும் நடுவில் செல்லும் கட்சியின் நிலைபாடு என்ன?
இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு நீண்ட காலம் மத்தியில் ஆட்சியிலிருப்பது
காங்கிரஸ் கட்சிதான். காந்தியே அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான். இந்தியா
சுதந்திரம் பெற்ற தினத்தன்று, மகாத்மா காந்தி கல்கத்தாவில் வகுப்புக்
கலவரங்களை அடக்க முயன்றுகொண்டிருந்தார். மேற்கு வங்க அரசின் புதிய
அமைச்சர்கள் மகாத்மா காந்தியின் ஆசியைப் பெறுவதற்காகச் சென்றார்கள்.
"ஆங்கிலேயர் ஆட்சியின்போது உங்களுக்குப் பல சோதனைகள் வந்தன. ஒரு வகையில்
பார்த்தால் அவையெல்லாம் சோதனைகளே அல்ல. இப்போது உங்களுக்கு முடிவில்லாத
சோதனை காத்திருக்கிறது. செல்வத்தின் கவர்ச்சிக்கு மயங்கிவிடாதீர்கள்.
கடவுள் உங்களுக்கு உதவுவாராக. கிராமங்களுக்கும் ஏழைகளுக்கும்
உதவுவதற்காகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்" என்று சொன்னார் காந்தி.

காந்தியின்
அறிவுரையை இந்திய அரசியல்வாதிகள் புறக்கணித்துவிட்டார்கள் என்று சொல்வது
மிகமிக மென்மையான விமர்சனம். கிராமங்களையும் ஏழைகளையும் கைவிட்டது அவர்கள்
செய்த முதல் துரோகம். 1950களிலும் 60களிலும் இந்தியாவின் பொருளாதாரக்
கொள்கை நகர்ப்புறங்களையும் தொழில்துறையையுமே சார்ந்திருந்தது. விவசாயமும்
கலைகளும் புறக்கணிக்கப்பட்டன. ஆரம்பக் கல்வி மிக மோசமாகப்
புறக்கணிக்கப்பட்டது.

இருந்தும் அந்தச் சமயத்தில் அதிகாரத்தில்
இருந்தவர்கள் காந்திய வழியில் நடந்தார்கள் என்று சொல்லலாம். அவர்கள்
தனிப்பட்ட முறையில் ஊழல்வாதிகளாக இருக்கவில்லை. ஆனால், 1970களிலிருந்து
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தித் தங்களுக்கும் தங்கள்
குடும்பத்தினருக்கும் சொத்துச் சேர்த்தார்கள். 2004இல் காலப் என்னும்
சர்வதேச நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்படி பார்த்தால்
அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருப்பது இந்தியாவில்தான்
அதிகம். அதில் பங்கேற்றவர்களில் 91 சதவீதம் பேர் தங்கள் பிரதிநிதிகளின்
மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று பதிலளித்தார்கள்.

இன்றைய
இந்தியாவில் காந்தி, காந்தியிஸம் என்று ஏதாவது எஞ்சியிருக்கிறதா? இந்தக்
கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன் ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்.
புத்தரைப் போலவே காந்தி இந்தியாவில் பிறந்தாலும் இந்தியாவுக்கு மட்டும்
சொந்தமானவரல்ல. புத்தரைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவுக்கு வெளியில்
இருந்தது போல, காந்தியையும் இந்தியாவிற்கு வெளியில் இருப்பவர்கள்
போற்றுகிறார்கள். டாக்டர் மார்ட்டின் லூதர் கிங், ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட்
டுடூ, தலாய் லாமா, ஆங் ஸான் ஸூ க்யி போன்றவர்கள் இதற்கு உதாரணங்கள்.
காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது மிகவும் வெட்கக்கேடான
விஷயம். ஆஸ்லோவில் இந்தப் பரிசை முடிவு செய்பவர்கள் இந்த அவமானத்தை
உணர்ந்திருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட நான்கு காந்தியவாதிகளுக்கு இந்த
விருதைக் கொடுத்ததன் மூலம் அதைச் சரிசெய்யவும் முயன்றிருக்கிறார்கள்.

sriramanandaguruji
நடத்துனர்

பதிவுகள் : 14
சேர்ந்தது : 26/11/2010
வயது : 58

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum