Similar topics
Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
Page 1 of 1
இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
வரையறையில்லாத இறையைப் போன்றதே இந்துமதமும். அனைத்தையும் அரவணைத்து, எதன் மீதும் வெறுப்பில்லாமல் இருந்ததால் இதற்குக் கரையும் எல்லைகளும் என்றும் இருந்ததில்லை.
ஆனாலும், அவ்வப்போது இருள் மேகங்கள் சூழும் நேரத்தில், நமது முன்னோர்கள் இந்தக் கடலுக்குக் கரைகட்டி அதைக் காப்பாற்ற முயன்றனர். இந்த முயற்சி மதத்தைக் காக்க அல்ல, மானுடத்தைக் காக்க. ஆம், இந்து மகான்கள் தொடர்ந்து இந்த உலகில் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்து, அன்பு ஒளியைத் தொடர்ந்து வீசி, அமைதியெனும் இந்து தர்மத்தின் கரைக்குத் தள்ளாடும் கலங்களாம் மனித உள்ளங்களைத் தொடர்ந்து கொண்டு வந்து சேர்த்துக் கொண்டுள்ளனர்.
இதன் விளைவாகவே பாரத தேசமெங்கும் நாம் மிகப் பெரிய வேதாந்த, சைவ, வைணவ, பக்தி இயக்கங்களின் எழுச்சியை ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாகக் கண்டு வந்தோம். சங்கரரும், ராமானுஜரும், மத்வரும், கண்ணப்பரும், அப்பரும், சம்பந்தரும், நந்தனாரும், நம்மாழ்வாரும், துளசிதாசரும், திருப்பணாழ்வாரும், ஆண்டாளும், மீராவும், ஏனைய நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஆன்மீகப் பெரியோர்களும் இருளில் ஆழவிருந்த நமது சமுதாயத்தை இறையன்பில் தோய்த்துத் தூக்கி நிறுத்தினார்கள். தமிழகத்தில் அதன் விளைவாகத் தமிழ் வாழ்ந்தது, தமிழ்ச் சமுதாயம் ஓங்கி உயர்ந்தது. பாரத நாடெங்கும் இந்த ஆன்மிக ஒளி அன்னியர் தாக்குதல்களையும், ஆக்கிரமிப்புகளையும் எதிர்த்துப் போராடும் உறுதியையும், வீரத்தையும் நமக்கு அளித்தது. இந்தத் தூய்மையான இறையன்பின் ஒளி இலங்கை, மலேஷியா, இந்தோனேஷியா என்று விரிந்து பரந்து முழு உலகையும் ஆட்கொண்டது.
உலக சரித்திரத்தில், மற்ற மதங்களெல்லாம் ஆதிக்கம் செலுத்திட விழைந்த நிலையில், தொடர்ந்து என்று துவங்கியது என்று அறியா வண்ணம் மெள்ள மெள்ள அன்பாலும், ஆன்மீக தத்துவங்களாலும் வளர்ந்தது நமது இந்து மதம். மதங்களுக்கிடையே அன்பு மதம் என்ற பெருமை இந்து மதத்துக்கே உண்டு, நாம் எவரையும் நிர்ப்பந்தித்து மதத்தைத் திணித்ததில்லை, ‘என் மதத்தைப் பின்பற்றாவிட்டால் நீ நரகத்துக்குச் செல்வாய்’ என பயமுறுத்தி வலுக்கட்டாயமாக வாள் முனையில் நம் மதத்தை எவர் மீதும் திணித்ததில்லை. அன்பே நம் வழியாய் இருந்துவந்துள்ளது. ஆதிக்கம் செலுத்த விழைந்து, எதையும் செய்யத் தயாராக இருக்கும் மதங்களின் தொடர்ந்த தாக்குதலுக்குப் பின்பும், இன்றும் இத்துணை பெரிய சமுதாயம் வாழ்ந்து வருவதே இதன் பின்னால் இருக்கும் ஆன்மீக ஒளிக்கு சான்றாகும்.
இன்றும் கருமேகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்றன. இச்சூழலில், நமது எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை, மாண்புகளை, தத்துவங்களை, அறிவொளியை, நம் சமுதாயம் நேர்கொள்ளும் பிரசினைகளை, விவாதங்களைத் தமிழில் கொண்டு செல்வது அவசியம் என்ற நோக்கில் இத்தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இங்கே நாங்களும் மாணாக்கர்கள் தாம். எங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சொல்கிறோம், நீங்களும் எங்களுக்கு வழிகாட்டலாம்.
ஆனாலும், அவ்வப்போது இருள் மேகங்கள் சூழும் நேரத்தில், நமது முன்னோர்கள் இந்தக் கடலுக்குக் கரைகட்டி அதைக் காப்பாற்ற முயன்றனர். இந்த முயற்சி மதத்தைக் காக்க அல்ல, மானுடத்தைக் காக்க. ஆம், இந்து மகான்கள் தொடர்ந்து இந்த உலகில் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்து, அன்பு ஒளியைத் தொடர்ந்து வீசி, அமைதியெனும் இந்து தர்மத்தின் கரைக்குத் தள்ளாடும் கலங்களாம் மனித உள்ளங்களைத் தொடர்ந்து கொண்டு வந்து சேர்த்துக் கொண்டுள்ளனர்.
இதன் விளைவாகவே பாரத தேசமெங்கும் நாம் மிகப் பெரிய வேதாந்த, சைவ, வைணவ, பக்தி இயக்கங்களின் எழுச்சியை ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாகக் கண்டு வந்தோம். சங்கரரும், ராமானுஜரும், மத்வரும், கண்ணப்பரும், அப்பரும், சம்பந்தரும், நந்தனாரும், நம்மாழ்வாரும், துளசிதாசரும், திருப்பணாழ்வாரும், ஆண்டாளும், மீராவும், ஏனைய நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஆன்மீகப் பெரியோர்களும் இருளில் ஆழவிருந்த நமது சமுதாயத்தை இறையன்பில் தோய்த்துத் தூக்கி நிறுத்தினார்கள். தமிழகத்தில் அதன் விளைவாகத் தமிழ் வாழ்ந்தது, தமிழ்ச் சமுதாயம் ஓங்கி உயர்ந்தது. பாரத நாடெங்கும் இந்த ஆன்மிக ஒளி அன்னியர் தாக்குதல்களையும், ஆக்கிரமிப்புகளையும் எதிர்த்துப் போராடும் உறுதியையும், வீரத்தையும் நமக்கு அளித்தது. இந்தத் தூய்மையான இறையன்பின் ஒளி இலங்கை, மலேஷியா, இந்தோனேஷியா என்று விரிந்து பரந்து முழு உலகையும் ஆட்கொண்டது.
உலக சரித்திரத்தில், மற்ற மதங்களெல்லாம் ஆதிக்கம் செலுத்திட விழைந்த நிலையில், தொடர்ந்து என்று துவங்கியது என்று அறியா வண்ணம் மெள்ள மெள்ள அன்பாலும், ஆன்மீக தத்துவங்களாலும் வளர்ந்தது நமது இந்து மதம். மதங்களுக்கிடையே அன்பு மதம் என்ற பெருமை இந்து மதத்துக்கே உண்டு, நாம் எவரையும் நிர்ப்பந்தித்து மதத்தைத் திணித்ததில்லை, ‘என் மதத்தைப் பின்பற்றாவிட்டால் நீ நரகத்துக்குச் செல்வாய்’ என பயமுறுத்தி வலுக்கட்டாயமாக வாள் முனையில் நம் மதத்தை எவர் மீதும் திணித்ததில்லை. அன்பே நம் வழியாய் இருந்துவந்துள்ளது. ஆதிக்கம் செலுத்த விழைந்து, எதையும் செய்யத் தயாராக இருக்கும் மதங்களின் தொடர்ந்த தாக்குதலுக்குப் பின்பும், இன்றும் இத்துணை பெரிய சமுதாயம் வாழ்ந்து வருவதே இதன் பின்னால் இருக்கும் ஆன்மீக ஒளிக்கு சான்றாகும்.
இன்றும் கருமேகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்றன. இச்சூழலில், நமது எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை, மாண்புகளை, தத்துவங்களை, அறிவொளியை, நம் சமுதாயம் நேர்கொள்ளும் பிரசினைகளை, விவாதங்களைத் தமிழில் கொண்டு செல்வது அவசியம் என்ற நோக்கில் இத்தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இங்கே நாங்களும் மாணாக்கர்கள் தாம். எங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சொல்கிறோம், நீங்களும் எங்களுக்கு வழிகாட்டலாம்.
sathishkumar- பதிவுகள் : 441
சேர்ந்தது : 29/11/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum