ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

ஒரு காதலின் முடிவு

Go down

ஒரு காதலின் முடிவு  Empty ஒரு காதலின் முடிவு

Post  santhoshkumar Fri Dec 03, 2010 9:26 pm

“நீ யாரையாவது காதலிச்சிருக்கியா....”

இந்த கேள்வியை அவளிடம் கேட்பதற்கு முன்பு எவ்வளவு முறை யோசித்திருப்பேன். எத்தனை தடவை கண்ணாடி முன்பு சொல்லிப் பார்த்திருப்பேன்.

“காதல் பத்தி உங்க அபிப்ராயம் என்ன..”..ம்..ம்ம்..சரியா வரலையே..”எப்படிபட்ட ஆளை காதலிப்பீங்க….”..ப்ச்..இன்னும் கூட பிரண்ட்லியா வரலாம்..

இப்படி பல தடவை கண்ணாடி முன்னால் நின்று என்னையே அவளாக நினைத்துக் கொண்டு சொல்லிக் கொண்டேன்..மனதுக்குள் உள்ளூற பயம்தான்..ஆனால் என்ன பண்ண முடியும். இதற்கு அடுத்து சொல்லப்போகும் வார்த்தை தானே என் வாழ்க்கையே மாற்றப்போகிறது…

நித்யா..என் வாழ்க்கையில் அதிகம் உச்சரித்த, உச்சரிக்க ஆசைப்பட்ட பெயர்..விண்ணைத்தாண்டி சொல்லவேண்டுமானால், என் வாழ்க்கையே புரட்டிப்போட்டவள். என் முகத்தையும் அடிக்கடி கண்ணாடியில் பார்க்கவைத்தவள். எப்போதும் கலைந்தே கிடைக்கும் பரட்டைத்தலையே சீவுவதற்காக இரண்டு ரூபாய் கொடுத்து சீப்பு வாங்க வைத்தவள்..அனைத்தும் அவள் என்னிடம் பேச ஆரம்பித்தவுடன்.

முதுகலை கல்லூரியில் நான் சேர்ந்த முதல் நாள். அனைத்து பேரும் என்னிடம் பேசினர்..அவளைத் தவிர..

“விடுடா..ராங்கியா இருப்பா..”

“மச்சான்..ஆளைப்பார்த்தவுடனே தெரியலை..இதெல்லாம் படிப்பு கேசுடா..நம்ம மாதிரி ஆளுங்ககிட்டல்லாம் ஒட்டாது..”

“இல்லடா..மாப்பி..அவ திமிரா இருக்குறமாதிரி தெரியலை..ஒருவேளை நாமளா போய் பேசணுமோ..”

“இதோடா..இதோ..இந்த பஸ் ஸ்டாண்டுலதான் நிக்குறா….இம்புட்டு பேரு முன்னாடி “நீங்க அழகா இருக்கீங்க” ன்னு எல்லாரும் கேட்கும்படி சொல்லு பார்ப்போம்..சொல்லிட்டா மவனே..இன்னைக்கு நான் டிரீட்டு..சொல்லலே…ஒருவாரம் புல்லா நீதாண்டா டிரீட்டு..”

எனக்கு சவாலாக தோன்றியது..

“டே..வெண்ணை..டிரீட் ரெடியா வை..ஒரு நிமிசத்தில சொல்லுறேன் பாரு..”

மனதுக்குள் வைராக்கியத்துடன் சென்றேன்..பஸ் ஸ்டாண்டில் தேவதையாய் அவள். பலபேரின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தாள்…அவளருகில் சென்றேன்..

“எக்ஸ்கியூஸ்மி..”

அப்போதுதான் அவள் பார்வையை இவ்வளவு அருகில் பார்க்கிறேன். என்ன பார்வை அது..இவள் மட்டும் விடுதலைக்கு முன்பு பிறந்திருந்தால் இந்தியாவுக்கு விடுதலையே கிடைத்திருக்காது. என்னை ஒரு நிமிஷம் அடித்து போட்டது. சொல்ல வந்த வார்த்தைகள் என் மனதுக்குள்ளே அடங்கிப்போனது. என் வாழ்க்கையில் முதல்முறையாக ஊமையாகிப்போனேன்..

“எஸ்..”

அப்படியே சிலையாகிப்போனேன்…ஒரு பெண்ணின் பார்வைக்கு இப்படி ஒரு சக்தியா..

“எஸ் வாட் டூ யூ வாண்ட்..”

“ம்ம்ம்..இல்ல..நீங்க எங்க கிளாஸ்தான..”

க்ளுக்கென்று சிரித்தாள். பெண்கள் சிரிப்பதற்கு அர்த்தம் தேடினால் உலகத்தின் முதல் முட்டாள் நீங்கள்தான். ஆனால் அவள் சிரிப்பில் அர்த்தம் தெரிந்தது…”வாடா..ஜொள்ளு பார்ட்டி..”

சுதாரித்துக் கொண்டேன்..

“ஹி..ஹி..வாட் த ஸ் டைம் நௌ..”

வாய் குழறினாலும் எனக்கு அவ்வளவுதான் ஆங்கிலத்தில் பேச வரும்..நண்பனுக்கு ஒரு வாரம் டிரீட் கொடுக்க அப்பாவிடம் நிறைய பொய் சொல்லவேண்டியிருந்தது…

அவள் பார்வைக்காகவே அடிக்கடி கல்லூரி செல்ல ஆரம்பித்தேன்..சனி ஞாயிறு வந்தாலே கடுப்பாக இருந்தது. மெல்ல, மெல்ல அவளும் என்னிடம் பேச ஆரம்பித்தாள்..பஸ் ஸ்டாண்டில் என் ஊருக்கு செல்லும் வழித்தடம் தான் அவளுக்கும் என்பது நிறைய வசதியாகிப்போனது.. நிறைய பேசுவோம்..சம்பந்தமில்லாமல்..எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாள். ஆங்கில புத்தகங்கள்..அனைத்தும் என் அலமாரியில் உறங்கின..”சிட்னி ஷெல்டன்..என்னமா எழுதுறான் பாரேன்..” கூசாமல் பொய் சொன்னேன்…அவ்வளுக்கு கஜல் பாடல்கள்தான் புடிக்கும் என்பதால் மொழி தெரியாவிட்டாலும் என்னை நானே பழக்கி கொண்டேன்.., சில கஜல் பாட்டுகளை போட்டபோது “இழவு வீட்டுல பாடுறமாதிரி இருக்கு..முதல்ல..அந்த கருமத்தை ஆப் பண்ணுடா..” என்று அம்மாவிடம் திட்டு வாங்கியதாக ஞாபகம்...சிட்டி முழுவதும் நாங்கள் நடக்காத தெருக்களே இல்லை என்றாகி விட்டாது..”டே..ஜஸ்ட் பிரண்ட்ஷிப் தாண்டா..” நண்பர்களிடம் பொய் சொன்னாலும் மனம் குதுகலித்தது..

கடைசியாக தீர்மானித்தேன்..அவளிடன் என் காதலை சொல்லி விடுவது....நாளைக்கே…அப்படி என்னை நான் தயார் செய்ததுதான் முதல் பாராவில் நீங்கள் படித்தது..எனக்குள் நானே பலமுறை சொல்லிப் பார்த்த பின்பு முடிவாக அவளிடம் சென்றேன்..

“நித்யா..”

“சொல்லுடா.”

“ப்ச்..ஒன்னுமில்ல விடு..”

“ஏதோ சொல்ல வந்த..என்ன விஷயம் சொல்லு...


“பரவாயில்லை..விடு..”

“ஹே..இப்ப சொல்லப்போறியா..இல்லையா..”

“ம்..அது வந்து..நீ யாரையாவது காதலிச்சிருக்கியா..”

டக்கென்று கேட்டுவிட்டேன்..அவள் முகத்தை பார்த்தேன்..குழப்ப ரேகைகள்..அவள் “இல்லை” என்று சொல்லவேண்டும்..திரும்ப அதே கேள்வியை அவள் என்னிடம் கேட்பாள்..அப்போது “நீதான்” என்று சொல்லவேண்டும் இதுதான் என் திட்டம்..

அவள் யோசித்தாள்..எனக்கு பயமாக இருந்தது..கடைசியாக அதை சொன்னாள்..

“எஸ்..ஐயாம் இன் லவ் வித் மை ஸ்கூல்மேட்..”

அப்படியே நொறுங்கிப்போனேன்..ஒருவருட சொர்க்கத்தை யாரோ ஒரு நிமிடத்தில் பிடுங்கியதாக இருந்தது..மனக் கோட்டை எல்லாம் மண் கோட்டையாகிப்போனது..முதல்முறையாக தற்கொலை பண்ணலாம் என்ற எண்ணம் வந்தது..

“டே..நான் ஏற்கனவே உங்கிட்ட சொல்லாமுன்னு நினைத்தேன்.அவன் பேர் ஆனந்த்..என் ஸ்கூல் மேட்..ஆறு வருசமா லவ் பண்ணுறோம்..அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா..ஹி இஸ் நைஸ் மேன்..”

பேசிக்கொண்டே இருந்தாள்..எதுவும் என் காதில் விழவில்லை..தற்கொலை பண்ணுவதற்கு முன்பாக ஆனந்தைப் தீர்த்துக்கட்டலாமா என்று எண்ணிக்கொண்டேன்..இதற்கு மேல் அங்கு உட்கார பிடிக்காமல் நடைபிணமாய் எழுந்து நடந்தேன்.

அதற்கு மேல் அந்த கல்லூரியே எனக்கு பிடிக்காமல் போயிற்று..அவளைப் பார்க்க பிடிக்காமல் கல்லூரியை மட்டம் தட்ட ஆரம்பித்தேன். பஸ் ஸ்டாண்டே கதியாக கிடந்த நான் பஸ்ஸில் போவதே வெறுக்க ஆரம்பித்தேன். பேர்வெல் பார்ட்டி கூட செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன்..வீட்டில் மிகவும் பயப்பட்டார்கள்..பேய் ஏதாவது அடிச்சிருக்கும் என்று எண்ணி கோயிலுக்கு கூட்டி சென்றார்கள்..அப்பா, அவருக்கு தெரிந்த ஒரு மேனேஜரை வைத்து ரெக்மண்டேசனில் வேலை வாங்கி தந்தார்கள்..

வேலைப் பளுவில் அனைத்து கவலையும் மறந்து போனது. வாழ்க்கை ஓட்டத்தில் ஐக்கியமாகிப்போனேன்….படிபடியாக உயர்ந்து அதே கம்பெனியில் ப்ராஜெக்ட் லீட் ஆனேன். பெற்றோர்கள் கடமையை முடிக்க எனக்கு திருமணம் பேசினார்கள்…அதுவும் முடிந்தது..

உலகத்தில் யாருக்கும் அப்படி ஒரு மனைவி அமையாது..உள்ளங்கையில் வைத்து தாங்கினாள்..எனக்கு காய்ச்சல் வரும் முன்பே அவள் கலங்கினாள். சலிக்காமல் அனைத்து வேலைகளையும் செய்தாள். அனைத்தையும் மறந்து போனேன்..அன்பின் அடையாளமாக எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது..வாழ்க்கை இப்படியாக ஓடிக் கொண்டு இருந்தபோதுதான் அவனை சந்தித்தேன்..என் கல்லுரி நண்பன்..ராஜேஷ்..என்னைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்தவன்,....

“ஹே..ராஜேஷ்..எப்படி இருக்க..”

“நான் நல்லா இருக்கண்டா..நீ.”

“ம்..நல்லா இருக்கேன்..”

“டே..சொல்ல மறந்துட்டேன்..நேற்று அவளைப் பாத்தேன்..”

“யாரு..”

“அதுதாண்டா..காலேஜ்ஜுல விழுந்து விழுந்து லவ் பண்ணினுயே..நித்யா.. அவதாண்டா..”

அந்தப்பெயரை கேட்டவுடன் என் இதயம் ஒரு நிமிடம் நின்றது..எனக்கு என்ன சொல்வதென்று தெரியலை..

“டே..என்னடா..ஏதாவது பேசுடா..”

“ம்ம்…என்ன பண்றாலாம்..”

“கல்யாணம் ஆகிடுச்சு..ரெண்டு குழந்தையாம்..சந்தோசமா இருக்கா..”

“அப்படியே இருக்க சொல்லு..நான் வர்றேன்..”

எழ முயற்சித்தேன்..


“டே..அப்புறம் ஒரு விஷயம்.” நண்பன் இழுத்தான்..

“பேச்சுவாக்குல நீ அவளை லவ் பண்ணுன மேட்டரை சொல்லிட்டேன்.. அவ உங்கிட்ட பேசனும்னு சொன்னா..உன் செல்போன் நம்பரை கொடுக்க தயக்காம இருந்துச்சு..அதுதான் உன் வீட்டு நம்பரை கொடுத்துட்டேன்...”

எனக்கு அவனை ஓங்கி அறையலாம் போல இருந்தது..நாலு திட்டு திட்டிவிட்டு வீடுநோக்கி சென்றேன்..எப்போது என்னைப் பார்த்தவுடன் அழகாக கட்டிக்கொள்ளும் என் குட்டிப்பாப்பா அன்றும் என்னை வந்து கட்டிக் கொண்டாள்..

“வாடா..வாடா..செல்லம்..அப்பா உனக்கு என்ன வாங்கி வந்துருக்கேன் பாரு..டடாய்ங்க்..ஐஸ்கிரீம்ம்ம்..”

“ஐ..ய்..சூப்பர்..தேங்க்ஸ் டாடி..”

குதூகலித்தாள்..ஒடி வந்து முத்தம் கொடுத்தாள்..

“டாடி…ஒரு ஆண்டி உங்களை கேட்டு போன் பண்ணியிருந்தாங்க..அம்மா கிச்சன்ல இருந்ததால நான் தான் எடுத்தேன்..அப்பா வீட்டுல இல்லைன்னு சொல்லிட்டேன். யாரு டாடி.”

“ம்ம்..ராங்க் நம்பரா இருக்கும்பா..இனிமேல் அந்த ஆண்டி போன் பண்ணினா அப்பா செத்துட்டாருன்னு சொல்லு..”

அர்த்தம் புரியாமல் தலையாட்டினாள்..

“எங்க போன..செல்லம்….அம்மா தேடுறேன் பாரு..”

கையில் பிசைந்த சோறுடன் என் மனைவி..

“வந்துட்டீங்களா..இவ பண்ணுற சேட்டை தாங்க முடியலை பாருங்க..ஒரு வாய் சோறு வாங்க மாட்டிங்குறா,.,,இவள கண்டிக்க மாட்டிங்களா..”

“நான் சாப்பிட மாட்டேனே..” பழிப்பு காட்டி ஓடினாள்..என் குழந்தை..பின்னாலே என் மனைவி..

“இப்ப சாப்பிடிறயா..இல்லையா..அம்மா அடிப்பேன்..”

“ம்..ஹூம்..”

“சாப்பிடுடா..என் செல்லம்ல..”

“ம்…ஹீம்..”

“புஜ்ஜிம்மால்ல..செல்லம்ல.. குட்டி பாப்பா சாப்பிடுமாம்..அம்மா கார்ட்டுன் போடுவாங்களாம்..”
santhoshkumar
santhoshkumar

பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum