ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there are 2 users online :: 0 Registered, 0 Hidden and 2 Guests

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

நம்பிக்கை - முயற்சி = மரணம்

Go down

நம்பிக்கை - முயற்சி = மரணம் Empty நம்பிக்கை - முயற்சி = மரணம்

Post  santhoshkumar Fri Dec 03, 2010 9:37 pm

ஒரு ஊரில் மழைபெய்து கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எல்லோரும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி உயிர்பிழைத்தல் பொருட்டு - ஊரைவிட்டுச் சென்றனர்.

ஒருவன் மட்டும் தெளிவாகச் சொன்னான் - "எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. கடவுள் என்னைக் கண்டிப்பாகக் காபபாற்றுவார். அதனால் நான் இங்கேதான் இருப்பேன்" என்று கூறி ஊரைவிட்டு வெளியே கிளம்ப மறுத்தார். ஊரெங்கும் பண்பலை வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் வெள்ள எச்சரிக்கைகள் வந்த வண்ணமே இருந்தன.

மக்கள் அச்சப்பட்டு கூட்டம் கூட்டமாக ஊரைவிட்டு வெளியேறினர். அந்த ஒருவன் மட்டும் ஊரைவிட்டு வர மறுத்தான். மழை தொடர்ந்து பெய்தது. ஒரு ஜீப் வண்டியில் மீட்புக்குழுவினர் வந்து அவனைப் பார்த்து, 'வண்டியில் ஏறிக்கொள் உயிரைக் காத்துக்கொள்" என்றனர்.

இவனோ "கடவுள் காப்பாற்றுவார்..நீங்கள் போகலாம்", என்றான். அடாது மழை விடாது பெய்தது, ஊரில் இவன் மட்டும் தான் இருந்தான். இப்பொது இவனது மார்பு அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்து இருந்தது. மீட்புக்குழுவினர் படகில் வந்தனர். இவனருகில் வந்து 'தயவு செய்து படகில் ஏறிக்கொள். உயிரைக்காத்துக்கொள்", என்றனர்.

இவனோ "கடவுள் காப்பாற்றுவார்..நீங்கள் போகலாம்", என்றான். இப்பொழுது வெள்ளநீர் இவனது தோள்பட்டையைத்தாண்டிக் கொண்டிருந்தது.

இறுதிக்கட்ட மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த 'எலிகாப்டர்' ஒன்று இவனை வட்டமிட்டு செய்திகூறியது.'தயவு செய்து எலிகாப்டரில் ஏறிக்கொள். உயிரைக்காத்துக்கொள்", என்று செய்தி தெரிவித்தது. இவனோ "கடவுள் காப்பாற்றுவார்..நீங்கள் போகலாம்", என்றான்.

இடி மின்னலுடன் மழை பிரளயமாக உருவெடுத்தது. இவன் நீர்ரில் முழுவதும் மூழ்கி இறந்தான். விண்ணுலகம் சென்றான். அங்கே கடவுளுடன் தர்க்கம் செய்தான்.

"இவ்வளவு பெரிய வெள்ளத்தில் எல்லோரும் சுயநலமாக கடவுளாகிய உன்னைப் பற்றிக் கருதாமல் வேறு ஊருக்குச் சென்று தஞ்சம் புகுந்தார்கள். நான் ஒருவன் மட்டும் தான் உன்னை நினைத்து உருகி வேறிடம் செல்லாமல் கடவுள் காப்பாற்றுவார் - என்ற ஒரே எண்ணத்தில் இலயித்து இருந்தேன். ஆனால் நீயோ என்னைக் கைவிட்டுவிட்டாயே..இது முறையா?" என்றான்.

கடவுள் சொன்னார் -"அப்படியென்றால் ஜீப், படகு, எலிகாப்டர் - இவற்றை அனுப்பிவைத்து உன்னைக் காப்பாற்ற முயன்றது யார். நான்தானே. நீ என் மீது வெறும் நம்பிக்கை மட்டும்தான் வைத்து இருந்தாய். ஆனால் உயிர்பிழைப்பதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மீட்புக்குழுவை உன் பொருட்டு அனுப்பியது நான். ஆனால் நீ ஒரு சிறு முயற்சிகூட எடுக்காமல் உயிரிழந்தாய்", என்றார்.

நீதி : முயற்சியுடன் கூடிய நம்பிக்கையே வெற்றி தரும்
santhoshkumar
santhoshkumar

பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum