ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி

Join the forum, it's quick and easy

ராம ராஜ்யம்
ராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .

நன்றி
ராம ராஜ்யம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» I'm rudradeva
by Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm

» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm

» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm

» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm

» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm

» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm

» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm

» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm

» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm

» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm

» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm

» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm

» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm

» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm

» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup

இலக்கியக் கட்டுரை : பிணந்தழுவல்!

Go down

இலக்கியக் கட்டுரை : பிணந்தழுவல்!  Empty இலக்கியக் கட்டுரை : பிணந்தழுவல்!

Post  santhoshkumar Sun Dec 05, 2010 7:30 pm

பிணந்தழுவல்!


திருக்குறள் பொருட்பால் வரைவின் மகளிர் அதிகாரத்தின் மூன்றாம் குறளுக்கு (குறள் எண் 913) பரி்மேலழகர் உரையை ஒட்டியே பலரும் உரை எழுதியுள்ளனர். ஆனால், தேவநேயப் பாவாணரின் உரையில் (திருக்குறள் தமிழ்மரபுரை) புதிய செய்தி காணப்படுகின்றது.

முதலில் குறளைப்பார்ப்போம்:

பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
லேதில் பிணந்தழீஇ யற்று.

இக்குறளுக்குப் பரிமேலழகர் உரை:

பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது, சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணமெடுப்பார் காணப்படாததோர் இடத்தின் கண் இயைபில்லாதோர் பிணத்தை எடுக்குங்கால் அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவரா நின்றும், பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர், அதனை ஒழிக என்பதாம்.

பரிமோலழகர் உரையைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி இப்படிக் கூறலாம்:

பொருள் கொடுப்பவரை விரும்பாது, அவர் கொடுக்கும் பொருளுக்காகவே முயங்கும் பரத்தையர், சாதியும் பருவமும் பொருந்தாதவனையும் எந்தக் கருத்தையும் செயலையும் பற்றி எண்ணிப் பாராமல் கூடுவர். இந்நிலை, கூலிக்குப் பிணமெடுத்துச் செல்வார் இருட்டறையில், முன்பின் அறியாத ஓர் பிணத்தைத் தழுவினாற் போன்றது - என்பதாகும்.

மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் உரைகள் (சாதிபற்றி குறிப்பிடா விட்டாலும்) பெரிதும் பரிமேலழகர் உரையை ஒட்டியே அமைந்துள்ளன.

பரிதியார் 'வரைவின் மகளிர் பொய்யை மெய்யாக ஒழுகுதல் எத்தன்மைத்து எனின், இருட்டறையில் கல்பிணத்தைக் கட்டி அழுபவற்கு ஒக்கும் என்றவாறு' -என்று கூறுகிறார்.

இக் குறளுக்கான மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் உரையைக் கீழே காண்க:

பொருள் கொடுப்பாரை விரும்பாது அவர் கொடுக்கும் பொ்ருளையே விரும்பும் விலைமகளிரின் பொய்யான தழுவல், கூலிக்கு அமர்த்தப் பட்டவன் இருட்டறையில் யாதொரு தொடர்புமில்லாத கன்னிப் பெண்ணின் பிணவுடம்பைப் பொருளாசை கருதித் தழுவினாற் போலும்.

இங்கு 'முயக்கம்', 'தழீஇ' இரண்டும் இடக்கரடக்கல் என்று குறிப்பிடுகிறார்.

இக்குறளில் உள்ள உவமைத் தொடருக்கு பரத்தையரின் முயக்கத்தை இடக்கரடக்கலாகவும் பிணமெடுப்பாரின் செயலை தழுவல் என்றும் பரிமேலழகர் குறிப்பிடுவது பொருந்தாது என்கிறார்.

இவ்வுரை தொடர்பாக அவர் தரும் செய்தி கவனிக்கத் தக்கதாகும்.

1792 முதல் 1823 வரை தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கிறித்தவ சமயக் குரவராகிய அப்பர் தூபாயிசு, அவ்ருடைய தாய்மொழியில் எழுதிய 'இந்துப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்' என்ற நூலில் கீழ்வருமாறு எழுதியிருந்ததை எடுத்துக் காட்டு்கிறார்.

" இதே மக்களிடை, இனி, அருவருப்பானதும் வெறுப்புண்டு பண்ணுவதுமான ஒரு வழக்கத்தைக் கொண்ட நம்பூதிரி என்னும் ஒரு தனிக்குலமும் உள்ளது. இக்குலப்பெண்கள் வழக்கமாகப் பூப்படையு முன் மணஞ்செய்து வைக்கப்படுகின்றனர். ஆயின், பூப்புக்குறிகள் வெளிப்படையாகத் தோன்றும் பருவத்தை யடைந்த பெண் ஆடவனோடு கூடுமுன் இறக்க நேரின், அவள் சவவுடம்பைப் பேய்த் தன்மையான புணர்ச்சிக் குட்படுத்த வேண்டுமென்பது கண்டிப்பான குலமரபாம்.

இதன் பொருட்டு அப்பெண்ணின் பெற்றோர் அத்தகைய அருவருப்பான மணவகையை முற்றுவித்தற்கு இசையும் ஒரு வெங்கப் பயலைப் பணப்பரிசு கொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது.

ஏனெனின் அம்மணம் முற்றுவிக்கப் பெறாவிடின், அக்குடும்பம் தன் மானத்தை இழந்து விட்டதாகக் கருதிக்கொள்ளும்." (மூன்றாம் பதிப்பு, பக். 16-17)

இது பற்றி அந்நூலின் பதிப்பாசிரியர் வரைந்துள்ள அடிக்குறிப்பில், மேலே குறிப்பிட்ட அப்பர் தூபாயிசு கூறிய செய்தி உறுதிப் படுத்தப்பட வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார்.

பதிப்பாசிரியர் மறுத்திருப்பினும், அப்பர் தூபாயிசு கூற்றை வலிப்படுத்தும் வகையில் பாவாணர் பத்து ஏதுக் குறிப்புகள் தருகிறார்.

எனவே, இக்குறளுக்குப் பாவாணர் தந்துள்ள உரை, பொருத்தம் உடையதாகவே உள்ளது.
santhoshkumar
santhoshkumar

பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum