Latest topics
» I'm rudradevaby Rudradeva Sun Apr 17, 2011 9:39 pm
» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:54 pm
» இரும்புக் கதவுகள்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:48 pm
» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:42 pm
» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:36 pm
» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:29 pm
» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்
by santhoshkumar Mon Jan 03, 2011 8:27 pm
» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது
by santhoshkumar Mon Jan 03, 2011 8:26 pm
» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.
by santhoshkumar Mon Jan 03, 2011 8:23 pm
» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி
by santhoshkumar Mon Jan 03, 2011 8:19 pm
» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:15 pm
» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது
by sriramanandaguruji Mon Jan 03, 2011 8:13 pm
» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:55 pm
» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:53 pm
» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்
by santhoshkumar Fri Dec 31, 2010 8:51 pm
Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest None
Most users ever online was 101 on Mon Nov 15, 2021 11:54 am
popup
பொதுவுடைமைவாதிகளின் தமிழ்ப் பற்ற
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை
Page 1 of 1
பொதுவுடைமைவாதிகளின் தமிழ்ப் பற்ற
பொதுவுடைமைவாதிகளின் தமிழ்ப் பற்ற
சில ஆண்டுகளுக்கு முன் பாரிஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அடிக்கடி பாரிஸ் லாச்சப்பலில் சந்திக்கும் நண்பர் ஒருவரின் அன்பான அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். அங்கிருந்த நம் தமிழ் உறவுகளுடன் உரையாடத் தொடங்கியபோது அவர்கள் அனைவரிடமும் ஒரு பொதுத் தன்மை இருந்ததைக் காணக் கூடயதாக இருந்தது. ஆம் அனைவருமே மார்க்சிய லெனினய தத்துவங்களில் ஊறித் திளைத்திருந்தார்கள்.
எனக்கும் பொதுவுடைமைத் தத்துவங்களில் ஈடுபாடு வரத்தொடங்கிய காலம் அது. நான் எண்ணிப் பார்க்கிறேன், பொதுவுடைமைக் கருத்துக்கள் மீதான எனது ஈடுபாடு கவிஞர் பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் வழியாகத்தான் முதன் முதலாக ஏற்பட்டது. உழைப்பின் மேன்மை பற்றியும் தொழிலாளர்களின் வாழ்வியல் அவலங்களையும் அந்தத் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டி வாழும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் அவரது பாடல்கள்; மிக அழகாக வெளிக்காட்டியிருக்கின்றன. குறிப்பாக நாடோடி மன்னன் திரைப் படத்தில் வரும் “காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடத்த பாடல்களில் ஒன்று. அதைப் போன்று காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே பசையற்றுப் போனோமடா என்ற தோழர் ஜீவாவின் வரிகளும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர்தான் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ட்ரொட்ஸ்கி போன்றவர்களின் கருத்துக்களை படிக்கத் தொடங்கியிருந்தேன்
இப்படி ஒரு கால கட்டத்தில் அந்தக் கூடத்திற்குச் சென்றதால் அவர்களின் பேச்சுக்கள் வழியாக மேலும் பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. நல்லதொரு கூட்டத்திற்கு வந்திருக்கிறேன் என என் மனம் மகிழ்ந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் ஈழப் போராட்டம் தொடர்பாகவும் அவர்கள் முன் வைத்த கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேசியம் கற்பிதம் என்றும் சிங்கள வெறி பிழை என்றால் தமிழ் வெறி மட்டும் சரியா என்றும் கேள்வி எழுப்பினார்கள். இன அழிப்பை மேற்கொள்ளும் சிங்களப் பெருந்தேசியத்தையும் அந்த அழிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் தமிழ்த் தேசியத்தையும் அந்தத் தோழர்கள் ஒன்றாக ஒப்பிட்டது எனக்கு ஒரு வித சினத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் மட்டுமல்ல அன்றிலிருந்து இன்றுவரை நான் அறிந்து கொண்டிருக்கும் பெரும்பாலான பொதுவுடைமைவாதிகளும் பொதுவுடைமைக் கட்சிகளும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கொண்டிருப்பதையே கண்டுவருகிறேன். (தோழர் மணியரசன், தோழர் தியாகு, தோழர் நல்லக்கண்ணு போன்றவர்களை விதிவிலக்குகள் என்றே எண்ணத்தோன்றுகிறது) ஈழப் போராட்டத்திற்கு பாசிசப் பட்டம் கட்டும் இவர்கள் ரஷ்யாவின் சர்வாதிகாரியாக இருந்த ஸ்டாலினைப் போற்றுகிறார்கள். தோழர் லெனின் அவர்கள் ஒடுக்கப் பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் ஆனால் ஸ்டாலின் அப்படி அல்ல அவரது நோக்கம் உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால் சகிப்புத் தன்மையற்று அவர் நடத்திய மனித வேட்டைகள் உலக வரலாற்றின் கறுப்பு அத்தியாயங்கள். ஆனால் நமது பொதுவுடைமை தோழர்களுக்கு அது தவறாகப் படுவதில்லை.
தமிழ்த் தேசியத்தை இந்துத்துவவாதிகள், இந்தியத் தேசியவாதிகள், சிங்கள இனவாதிகள், ஏகாதிபத்திய அடிவருடிகள் எதிர்க்கலாம், பொதுவுடைமை வாதிகள் ஏன் எதிர்க்க வேண்டும். மார்க்சோ லெனினோ தேசியத்தின்; இருப்பை என்றைக்கும் மறுக்கவில்லை. ‘தேசிய இனங்களின் தன்னுரிமை அவர்களின் பிறப்புரிமை’ என்ற புரட்சியாளர் லெனின் கோட்பாடு பொதுவுடைமைவாதிகளாலேயே கல்லறைக்கு அனுப்பப் படுகிறது.
வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கும் போது பொதுவுடைமைவாதிகளின் பல தவறுகளை புலப்படுகின்றன. பேராசான் கார்ல் மார்க்சின் மறைவுக்குப் பின் அவரது தத்துவார்த்த வாரிசாக விளங்கி தேசியங்களின் சுய நிர்ணைய உரிமைக்காக குரல் கொடுத்த கார்ல் கவுட்ஸ்கி பின்னர் நிறம் மாறி முதலாவது உலகப் போரில் தனது சொந்த நாடான ஜேர்மனியின் நில ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் செயலைச் செய்தார். இலங்கையில் இரு மொழி ஒரு நாடு அல்லது ஒரு மொழி இரு நாடுகள் என்று தேசியத் தன்மைக்கு சரியான விளக்கம் கொடுத்த கொல்வின் ஆர்.டி.சில்வா பின்னர் அந்தக் கொள்கையில் இருந்து விலகி தமிழர்களின் உரிமையை மறுக்கும் விதமாக 1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பை எழுதினார். 1965 ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய இனவாத ஊர்வலத்தில் சமசமாஜக் கட்சியும் சோவியத் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து கொண்டன. இடது சாரி இயக்க வரலாற்றிலே வெட்கக் கேடான நிகழ்வாக இது கருதப் படுகிறது.
இவர்கள் எல்லாரையும் விட இந்தியக் கொம்யூனிஸ்டுகளின் தேசியம் தொடர்பான கருத்து மற்றும் செயற்பாடுகள் அசல் கேலிக் கூத்தாக இருக்கிறது. மக்களின் நலனை அவர்களின் உரிமைகளை புறந்தள்ளி வெறும் மண்ணுக்கு மட்டும் தெய்வீகப் பட்டம் கட்டி அதை பாரத மாதாவாக வழிபாடு செய்யும் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் ஒடுக்கப் பட்ட இனத்தின் குரலாக ஒலிக்கும் தமிழ்த் தேசியத்தை மறுக்கிறார்கள். அந்தக் கேலிக் கூத்தின் மற்றொரு வெளிப்பாடுதான் பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில் நடைபெற்ற தங்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜே.வி.பி. தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஈழப் பிரச்சினையில் மட்டுமல்ல கஷ்மீர், அஸ்ஸாம், பஞ்சாப், நாகலாந்து பிரச்சனைகளில் எல்லாம் இந்தியத் தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக இவர்கள் செய்யும் மார்க்சியத் துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் கொம்யூனிஸ்ட்டுகள் அவரவர்களுடைய மொழி வட்டத்திற்குள் இருக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள இந்தியக் கொம்யூனிஸ்டுகள் மாநிலப் பார்வை தவறு அகில இந்தியப் பார்வைதான் சரியானது என்கிறார்கள். தமிழர்களை ஏமாளிகள் என நினைக்கும் தரங்கெட்ட தன்மைதான் இவர்களிடமிருந்து வெளிப்படுகிறது.
இவை எல்லாம் மார்க்சியம் பேசும் நம் தமிழ்த் தோழர்களுக்கு தெரிய மறுக்கிறது.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப ஒரு சமுகத்தைப் பிடித்திருக்கும் நோயின் தன்மை அறிந்து அதற்கு ஏற்றவாறு எங்களின் செயற்பாடுகள் இருக்க வேண்டும். நமது தமிழ்ப் பொதுவுடைமைவாதிகள் சறுக்கும் இடமும் இதுதான்.
இன்றைய காலத்தில் ஈழத் தமிழர்களின் தலையாய பிரச்சனை தேசிய இன விடுதலையேயன்றி வர்க்க விடுதலை அல்ல. வர்க்க வேறுபாடுகள் களையப் பட வேண்டும் என்பது முற்றிலும் நியாயமானதுதான். அதன் வட்டம் தமிழ்த் தேசியத்திற்குள்தான் நிற்கவேண்டுமே தவிர சிங்களத் தொழிலாளர்களையும் சேர்த்துக் கொண்டு உலக பாட்டாளி வர்க்கக் கனவுடன் மிதப்பதல்ல. சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பேரிடும் தமிழ்த் தேசியத்தை சிங்கள பொதுவுடைமைவாதிகளே ஆதரித்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான மார்க்சியம். ஆனால் இந்திய தேசியத்தில் கரைந்த இந்தியப் பொதுவுடைமைவாதிகள் போல் சிங்களப் பேரினவாதத்தில் இவர்களும் ஐக்கியமாகி விட்டார்கள். எதார்த்தம்; இவ்வாறு இருக்கும் போது நாம் தமிழ்த் தேசியத்தை பலப் படுத்தினால்தானே எமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
மார்க்சியம் எனப்படும் பொதுவுடைமைச் சித்தாந்தம் ஒரே தன்மையுடன் எல்லா இடங்களிலும் நடை முறைப் படுத்தப் படவில்லை, அதனை உலக முதலாளியத்திற்கு எதிரான கருத்துப் போராகவே மார்க்சியத்தின் மூலவர்களான கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் கண்டார்கள். லெனின் அதனை நிலவுடமையாளர்களுக்கு எதிராகவே நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டார். ஹோசிமின், பிடல் கஸ்ட்ரோ போன்றவர்கள் அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏதிராக பயன் படுத்தி வெற்றி கண்டார்கள்.
இதனை விளங்கிக் கொள்ளமால் மார்க்சியத்தை எந்த மாற்றத்திற்குள்ளும் உட்படுத்த விரும்பாமல் அப்படியே பின் பற்ற விளைகிறார்கள். ரஷ்ய மண்ணும் இந்திய மண்ணும் தமிழ் மண்ணும் அடிப்படையில் பல வேறுபாடுகளை உள்ளடக்கியது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள.; இதன் விளைவால்தான் வேறு சில பொதுவுடைமைவாதிகள் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதுபோல் தலித்தியத்தையும் எதிர்க்கிறார்கள். சாதியம் பற்றி எரியும் இந்திய தூணைக் கண்டத்தில் சாதியை ஒழிக்காமல் பிராமணத் தொழிலாளியையும் தாழ்த்தப் பட்ட தொழிலாளியையும் ஒன்றாக இணைக்க முடியுமா? இந்த இடத்தில் சாதி ஒழிப்புப் போராட்டம் வர்க்கப் போராட்டத்தைக் காட்டிலும் முக்கியமானது. பிறவி ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்காமல் வர்க்க ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க நினைப்பது பிறவி ஆதிக்க சாதிகளை நிரந்தர ஆதிக்கவாதிகளாக இருப்பதற்குத்தான் வழிவகுக்கும். சாதி வேறுபாட்டை ஒழித்து சமூக நீதியைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப் பட்ட மண்டல் குழு அமுலக்கத்தின்போது இந்தியக் கொம்யூனிஸ்டுகள் காட்டிய இரட்டை நிலைப் பாடு நாடறிந்த ஒன்றாகும். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் பொதுவுடைமைவாதிகளோடு முரண்பட்டதிற்கும் இதுதான் காரணம்
மார்க்சியத்திற்கும் தமிழித் தேசியத்திற்கும் தலித்தியத்திற்கும் களங்கள் வௌ;வேறாக இருக்கலாம் ஆனால் பொதுத் தன்மை ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆம் மூன்றுமே ஒடுக்கப் பட்ட மக்களின் போர்வாள்கள்தான்.
பொதுவுடைமைவாதிகளிடம் நான் கண்ட மற்றுமொரு தன்மை தமிழின் தொன்மை தொடர்பாக அவர்கள் காட்டும் அலட்சியம். உலகத்திலே தமிழ் மொழிதான் மிகச் சிறந்த மொழி அதைவிடச் சிறந்த மொழி இல்லை என நாங்கள் மார் தட்டத் தேவையில்லை அது அழகுமாகாது. ஆனால் தமிழ் மொழி ஒரு தொன்மையான மொழி என்பதுடன் மிகச் சிறந்த இலக்கியங்களையும் இலக்கண வளமும் கொண்ட மொழி. பிற மொழிகள் கலப்பின்றி இயங்கக் கூடய தனித்தன்மை வாய்ந்த மொழி. சங்க காலம் தொடங்கி இன்று வரை பார்த்தால் ஒளவையார், கபிலர், வள்ளுவர், இளங்கோவடிகள், அப்பர், ஆண்டாள், திருமூலர், பாரதி, பாரதிதாசன் என பல ஆயிரக்கணக்கான புலவர் பட்டாளத்தைக் கொண்டுள்ள மொழி, கால்டுவேல் ஜி.யு.போப் போன்ற மேலை நாட்டு அறிஞர்களையும் கவர்ந்திழுத்த மொழி. ஏத்தனையோ பண்பாட்டுப் படை எடுப்புக்களை எதிர்கொண்டும் அழிந்து அடையாளம் தெரியாமல் போகாமல் தலை நிமிர்ந்து நின்று நாளை முடிசூடப் போகும் நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மொழி. இவைகள் எல்லாம் வெறும் பெருமைகள் அல்ல வரலாறுகள். எங்களுக்கு வரலாறு பெருமையாக இருக்கிறது. ஒரு மொழி குறித்த பெருமித உணர்வு வருவது தவறல்ல. பொதுவுடைமைவாதிகள் அதை மறுப்பதுதான் தவறு. மார்க்சியம் பேசுவது உயர்வானது வள்ளுவம் பேசுவது அப்படி அல்ல என்று கருதுகிறார்கள் போலும்.
மார்க்சியம் என்பது உலகை உயிர்பிக்க வந்த உயரிய தத்துவம் என்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. இன்று தேசிய இன மக்களின் வாழ்வியல் நலங்களை அச்சுறுத்தும் அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உலகமயமாக்கல் தாரளமயமாக்கல் போன்றவற்றின் பாதிப்புகள் இன்றைய காலத்திலும் மார்க்சியத்தின் வரலாற்றுத் தேவையை உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழர்களாகிய நாம் எமது வரலாற்று வேர்களை கண்டறிந்து அதிலுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு மார்க்சியத்தை துணை கொள்ளவதுதான் சிறந்ததேயன்றி மார்க்சியத்தின் பரிசோதனைக் களமாக தமிழ்த் தேசத்தை மாற்றுவதல்ல.
சில ஆண்டுகளுக்கு முன் பாரிஸ் நகரில் நடந்த கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அடிக்கடி பாரிஸ் லாச்சப்பலில் சந்திக்கும் நண்பர் ஒருவரின் அன்பான அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். அங்கிருந்த நம் தமிழ் உறவுகளுடன் உரையாடத் தொடங்கியபோது அவர்கள் அனைவரிடமும் ஒரு பொதுத் தன்மை இருந்ததைக் காணக் கூடயதாக இருந்தது. ஆம் அனைவருமே மார்க்சிய லெனினய தத்துவங்களில் ஊறித் திளைத்திருந்தார்கள்.
எனக்கும் பொதுவுடைமைத் தத்துவங்களில் ஈடுபாடு வரத்தொடங்கிய காலம் அது. நான் எண்ணிப் பார்க்கிறேன், பொதுவுடைமைக் கருத்துக்கள் மீதான எனது ஈடுபாடு கவிஞர் பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் பாடல்கள் வழியாகத்தான் முதன் முதலாக ஏற்பட்டது. உழைப்பின் மேன்மை பற்றியும் தொழிலாளர்களின் வாழ்வியல் அவலங்களையும் அந்தத் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டி வாழும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தையும் அவரது பாடல்கள்; மிக அழகாக வெளிக்காட்டியிருக்கின்றன. குறிப்பாக நாடோடி மன்னன் திரைப் படத்தில் வரும் “காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடத்த பாடல்களில் ஒன்று. அதைப் போன்று காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே பசையற்றுப் போனோமடா என்ற தோழர் ஜீவாவின் வரிகளும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் பின்னர்தான் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ட்ரொட்ஸ்கி போன்றவர்களின் கருத்துக்களை படிக்கத் தொடங்கியிருந்தேன்
இப்படி ஒரு கால கட்டத்தில் அந்தக் கூடத்திற்குச் சென்றதால் அவர்களின் பேச்சுக்கள் வழியாக மேலும் பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. நல்லதொரு கூட்டத்திற்கு வந்திருக்கிறேன் என என் மனம் மகிழ்ந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் ஈழப் போராட்டம் தொடர்பாகவும் அவர்கள் முன் வைத்த கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தேசியம் கற்பிதம் என்றும் சிங்கள வெறி பிழை என்றால் தமிழ் வெறி மட்டும் சரியா என்றும் கேள்வி எழுப்பினார்கள். இன அழிப்பை மேற்கொள்ளும் சிங்களப் பெருந்தேசியத்தையும் அந்த அழிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் தமிழ்த் தேசியத்தையும் அந்தத் தோழர்கள் ஒன்றாக ஒப்பிட்டது எனக்கு ஒரு வித சினத்தையும் ஏற்படுத்தியது. அவர்கள் மட்டுமல்ல அன்றிலிருந்து இன்றுவரை நான் அறிந்து கொண்டிருக்கும் பெரும்பாலான பொதுவுடைமைவாதிகளும் பொதுவுடைமைக் கட்சிகளும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கொண்டிருப்பதையே கண்டுவருகிறேன். (தோழர் மணியரசன், தோழர் தியாகு, தோழர் நல்லக்கண்ணு போன்றவர்களை விதிவிலக்குகள் என்றே எண்ணத்தோன்றுகிறது) ஈழப் போராட்டத்திற்கு பாசிசப் பட்டம் கட்டும் இவர்கள் ரஷ்யாவின் சர்வாதிகாரியாக இருந்த ஸ்டாலினைப் போற்றுகிறார்கள். தோழர் லெனின் அவர்கள் ஒடுக்கப் பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் ஆனால் ஸ்டாலின் அப்படி அல்ல அவரது நோக்கம் உயர்ந்ததாக இருக்கலாம் ஆனால் சகிப்புத் தன்மையற்று அவர் நடத்திய மனித வேட்டைகள் உலக வரலாற்றின் கறுப்பு அத்தியாயங்கள். ஆனால் நமது பொதுவுடைமை தோழர்களுக்கு அது தவறாகப் படுவதில்லை.
தமிழ்த் தேசியத்தை இந்துத்துவவாதிகள், இந்தியத் தேசியவாதிகள், சிங்கள இனவாதிகள், ஏகாதிபத்திய அடிவருடிகள் எதிர்க்கலாம், பொதுவுடைமை வாதிகள் ஏன் எதிர்க்க வேண்டும். மார்க்சோ லெனினோ தேசியத்தின்; இருப்பை என்றைக்கும் மறுக்கவில்லை. ‘தேசிய இனங்களின் தன்னுரிமை அவர்களின் பிறப்புரிமை’ என்ற புரட்சியாளர் லெனின் கோட்பாடு பொதுவுடைமைவாதிகளாலேயே கல்லறைக்கு அனுப்பப் படுகிறது.
வரலாற்றை சற்று பின்னோக்கிப் பார்க்கும் போது பொதுவுடைமைவாதிகளின் பல தவறுகளை புலப்படுகின்றன. பேராசான் கார்ல் மார்க்சின் மறைவுக்குப் பின் அவரது தத்துவார்த்த வாரிசாக விளங்கி தேசியங்களின் சுய நிர்ணைய உரிமைக்காக குரல் கொடுத்த கார்ல் கவுட்ஸ்கி பின்னர் நிறம் மாறி முதலாவது உலகப் போரில் தனது சொந்த நாடான ஜேர்மனியின் நில ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் செயலைச் செய்தார். இலங்கையில் இரு மொழி ஒரு நாடு அல்லது ஒரு மொழி இரு நாடுகள் என்று தேசியத் தன்மைக்கு சரியான விளக்கம் கொடுத்த கொல்வின் ஆர்.டி.சில்வா பின்னர் அந்தக் கொள்கையில் இருந்து விலகி தமிழர்களின் உரிமையை மறுக்கும் விதமாக 1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பை எழுதினார். 1965 ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய இனவாத ஊர்வலத்தில் சமசமாஜக் கட்சியும் சோவியத் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியும் கலந்து கொண்டன. இடது சாரி இயக்க வரலாற்றிலே வெட்கக் கேடான நிகழ்வாக இது கருதப் படுகிறது.
இவர்கள் எல்லாரையும் விட இந்தியக் கொம்யூனிஸ்டுகளின் தேசியம் தொடர்பான கருத்து மற்றும் செயற்பாடுகள் அசல் கேலிக் கூத்தாக இருக்கிறது. மக்களின் நலனை அவர்களின் உரிமைகளை புறந்தள்ளி வெறும் மண்ணுக்கு மட்டும் தெய்வீகப் பட்டம் கட்டி அதை பாரத மாதாவாக வழிபாடு செய்யும் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் ஒடுக்கப் பட்ட இனத்தின் குரலாக ஒலிக்கும் தமிழ்த் தேசியத்தை மறுக்கிறார்கள். அந்தக் கேலிக் கூத்தின் மற்றொரு வெளிப்பாடுதான் பஞ்சாப் தலைநகர் சண்டிகாரில் நடைபெற்ற தங்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜே.வி.பி. தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது. ஈழப் பிரச்சினையில் மட்டுமல்ல கஷ்மீர், அஸ்ஸாம், பஞ்சாப், நாகலாந்து பிரச்சனைகளில் எல்லாம் இந்தியத் தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக இவர்கள் செய்யும் மார்க்சியத் துரோகம் கொஞ்ச நஞ்சமல்ல. மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் கொம்யூனிஸ்ட்டுகள் அவரவர்களுடைய மொழி வட்டத்திற்குள் இருக்கும் போது தமிழ் நாட்டில் உள்ள இந்தியக் கொம்யூனிஸ்டுகள் மாநிலப் பார்வை தவறு அகில இந்தியப் பார்வைதான் சரியானது என்கிறார்கள். தமிழர்களை ஏமாளிகள் என நினைக்கும் தரங்கெட்ட தன்மைதான் இவர்களிடமிருந்து வெளிப்படுகிறது.
இவை எல்லாம் மார்க்சியம் பேசும் நம் தமிழ்த் தோழர்களுக்கு தெரிய மறுக்கிறது.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்ற வள்ளுவரின் வாக்குக்கேற்ப ஒரு சமுகத்தைப் பிடித்திருக்கும் நோயின் தன்மை அறிந்து அதற்கு ஏற்றவாறு எங்களின் செயற்பாடுகள் இருக்க வேண்டும். நமது தமிழ்ப் பொதுவுடைமைவாதிகள் சறுக்கும் இடமும் இதுதான்.
இன்றைய காலத்தில் ஈழத் தமிழர்களின் தலையாய பிரச்சனை தேசிய இன விடுதலையேயன்றி வர்க்க விடுதலை அல்ல. வர்க்க வேறுபாடுகள் களையப் பட வேண்டும் என்பது முற்றிலும் நியாயமானதுதான். அதன் வட்டம் தமிழ்த் தேசியத்திற்குள்தான் நிற்கவேண்டுமே தவிர சிங்களத் தொழிலாளர்களையும் சேர்த்துக் கொண்டு உலக பாட்டாளி வர்க்கக் கனவுடன் மிதப்பதல்ல. சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பேரிடும் தமிழ்த் தேசியத்தை சிங்கள பொதுவுடைமைவாதிகளே ஆதரித்திருக்க வேண்டும். அதுதான் உண்மையான மார்க்சியம். ஆனால் இந்திய தேசியத்தில் கரைந்த இந்தியப் பொதுவுடைமைவாதிகள் போல் சிங்களப் பேரினவாதத்தில் இவர்களும் ஐக்கியமாகி விட்டார்கள். எதார்த்தம்; இவ்வாறு இருக்கும் போது நாம் தமிழ்த் தேசியத்தை பலப் படுத்தினால்தானே எமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
மார்க்சியம் எனப்படும் பொதுவுடைமைச் சித்தாந்தம் ஒரே தன்மையுடன் எல்லா இடங்களிலும் நடை முறைப் படுத்தப் படவில்லை, அதனை உலக முதலாளியத்திற்கு எதிரான கருத்துப் போராகவே மார்க்சியத்தின் மூலவர்களான கார்ல் மார்க்சும் ஏங்கல்சும் கண்டார்கள். லெனின் அதனை நிலவுடமையாளர்களுக்கு எதிராகவே நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டார். ஹோசிமின், பிடல் கஸ்ட்ரோ போன்றவர்கள் அமரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏதிராக பயன் படுத்தி வெற்றி கண்டார்கள்.
இதனை விளங்கிக் கொள்ளமால் மார்க்சியத்தை எந்த மாற்றத்திற்குள்ளும் உட்படுத்த விரும்பாமல் அப்படியே பின் பற்ற விளைகிறார்கள். ரஷ்ய மண்ணும் இந்திய மண்ணும் தமிழ் மண்ணும் அடிப்படையில் பல வேறுபாடுகளை உள்ளடக்கியது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள.; இதன் விளைவால்தான் வேறு சில பொதுவுடைமைவாதிகள் தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதுபோல் தலித்தியத்தையும் எதிர்க்கிறார்கள். சாதியம் பற்றி எரியும் இந்திய தூணைக் கண்டத்தில் சாதியை ஒழிக்காமல் பிராமணத் தொழிலாளியையும் தாழ்த்தப் பட்ட தொழிலாளியையும் ஒன்றாக இணைக்க முடியுமா? இந்த இடத்தில் சாதி ஒழிப்புப் போராட்டம் வர்க்கப் போராட்டத்தைக் காட்டிலும் முக்கியமானது. பிறவி ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்காமல் வர்க்க ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க நினைப்பது பிறவி ஆதிக்க சாதிகளை நிரந்தர ஆதிக்கவாதிகளாக இருப்பதற்குத்தான் வழிவகுக்கும். சாதி வேறுபாட்டை ஒழித்து சமூக நீதியைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப் பட்ட மண்டல் குழு அமுலக்கத்தின்போது இந்தியக் கொம்யூனிஸ்டுகள் காட்டிய இரட்டை நிலைப் பாடு நாடறிந்த ஒன்றாகும். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் பொதுவுடைமைவாதிகளோடு முரண்பட்டதிற்கும் இதுதான் காரணம்
மார்க்சியத்திற்கும் தமிழித் தேசியத்திற்கும் தலித்தியத்திற்கும் களங்கள் வௌ;வேறாக இருக்கலாம் ஆனால் பொதுத் தன்மை ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆம் மூன்றுமே ஒடுக்கப் பட்ட மக்களின் போர்வாள்கள்தான்.
பொதுவுடைமைவாதிகளிடம் நான் கண்ட மற்றுமொரு தன்மை தமிழின் தொன்மை தொடர்பாக அவர்கள் காட்டும் அலட்சியம். உலகத்திலே தமிழ் மொழிதான் மிகச் சிறந்த மொழி அதைவிடச் சிறந்த மொழி இல்லை என நாங்கள் மார் தட்டத் தேவையில்லை அது அழகுமாகாது. ஆனால் தமிழ் மொழி ஒரு தொன்மையான மொழி என்பதுடன் மிகச் சிறந்த இலக்கியங்களையும் இலக்கண வளமும் கொண்ட மொழி. பிற மொழிகள் கலப்பின்றி இயங்கக் கூடய தனித்தன்மை வாய்ந்த மொழி. சங்க காலம் தொடங்கி இன்று வரை பார்த்தால் ஒளவையார், கபிலர், வள்ளுவர், இளங்கோவடிகள், அப்பர், ஆண்டாள், திருமூலர், பாரதி, பாரதிதாசன் என பல ஆயிரக்கணக்கான புலவர் பட்டாளத்தைக் கொண்டுள்ள மொழி, கால்டுவேல் ஜி.யு.போப் போன்ற மேலை நாட்டு அறிஞர்களையும் கவர்ந்திழுத்த மொழி. ஏத்தனையோ பண்பாட்டுப் படை எடுப்புக்களை எதிர்கொண்டும் அழிந்து அடையாளம் தெரியாமல் போகாமல் தலை நிமிர்ந்து நின்று நாளை முடிசூடப் போகும் நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மொழி. இவைகள் எல்லாம் வெறும் பெருமைகள் அல்ல வரலாறுகள். எங்களுக்கு வரலாறு பெருமையாக இருக்கிறது. ஒரு மொழி குறித்த பெருமித உணர்வு வருவது தவறல்ல. பொதுவுடைமைவாதிகள் அதை மறுப்பதுதான் தவறு. மார்க்சியம் பேசுவது உயர்வானது வள்ளுவம் பேசுவது அப்படி அல்ல என்று கருதுகிறார்கள் போலும்.
மார்க்சியம் என்பது உலகை உயிர்பிக்க வந்த உயரிய தத்துவம் என்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. இன்று தேசிய இன மக்களின் வாழ்வியல் நலங்களை அச்சுறுத்தும் அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் உலகமயமாக்கல் தாரளமயமாக்கல் போன்றவற்றின் பாதிப்புகள் இன்றைய காலத்திலும் மார்க்சியத்தின் வரலாற்றுத் தேவையை உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழர்களாகிய நாம் எமது வரலாற்று வேர்களை கண்டறிந்து அதிலுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு மார்க்சியத்தை துணை கொள்ளவதுதான் சிறந்ததேயன்றி மார்க்சியத்தின் பரிசோதனைக் களமாக தமிழ்த் தேசத்தை மாற்றுவதல்ல.
santhoshkumar- பதிவுகள் : 589
சேர்ந்தது : 02/12/2010
ராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum